உன் உறவு மட்டும் போதும்.
உன் தூய அன்பில் நனைந்து இருக்கும்
அந்த நொடி எப்போதும் வேண்டும்.
தினமும் உன்னிடம் பேசி முடித்த பின்பும்
இன்னும் பேசிட வேண்டி
என் மனம் தூண்டும்.
காதலே காதலே நீ!
எந்தன் மூச்சிலும் பேச்சிலும் நீ,
நீ மட்டுமே !!!
கூரிய விழி பார்வையிலே
நீ முறைக்கும் போதும்
விழியின் ஓரம் துளிர் விடும்
உன் துளி புன்னகை வேண்டும்
உன் பெயரை ஆயிரம் முறை
சொல்லி முடித்தாலும்
இன்னும் கோடி முறை
மனம் கூறிட தூண்டும்
காதலே காதலே நீ!
எந்தன் வாழ்விலும் தாழ்விலும் நீ,
நீ மட்டுமே !!!
சில நேரம் எந்தன் மனம்
தொய்வடையும் போதும்
உன் வார்த்தை கேட்டு மீண்டும்
எழும் விந்தை அது வேண்டும்
உந்தன் வார்த்தைகள் கேட்டு
நான் உலகமே மறக்கும் - அந்த
நொடி பொழுது
எப்போதும் வேண்டும்
காதலே காதலே நீ!
எந்தன் எண்ணமும் திண்ணமும் நீ,
நீ மட்டுமே !!!
வான் வீதியில் நான் நட்சத்திரங்களை
எப்போது காணும் போதும்
என் நினைவில் தோன்றும் உந்தன்
சிரிப்பு அது வேண்டும்
என்னிடம் நீயும் கோபம் கொள்ளும் போதும் சில நொடியில்
அதை மறந்து காட்டும்
பரிவு அது வேண்டும்
காதலே காதலே நீ!
என்றும் என் காதலும் வாழ்க்கையும் நீ,
நீ மட்டுமே!
காதலே காதலே நீ!
என்றும் என் உயிரிலும் ஒவ்வொரு அணுவிலும் நீ,
நீ மட்டுமே!!
No comments:
Post a Comment