Monday, May 18, 2020

உன்னைத் தேடி


பணம் தேடும் இவ்வுலகில் 
மனம் தேடி அலைகிறேன். 
பதில் கூற எவரும் இன்றி 
செதில் செதிலாய் உடைகிறேன். 
இருளில் தனிமையில் நானும் 
கண்ணீர் தானே சிந்துகிறேன்.

ஆறுதல் கூற யாரும் இன்றி 
நித்தம் நித்தம் வாடுகிறேன். 
சோகம் தீர்க்க யாரும் இன்றி 
கண்ணீர் துடைக்க விரல்கள் இன்றி 
மீண்டும் மீண்டும் இறக்கிறேன்!!!

இதம் தரும் விடிகாலையும், 
மனம் வருடும் தென்றலும்
எரிகுழம்பாய் தோன்றுதே 
நரக வேதனை வாட்டுதே. 
நிஜம் என அருகில் சென்றதும்
நிழலாக மாறுதே, கானல் நீராய் ஆனதே !!!

என் ஆணி வேரும் வீழ்ந்ததே 
என் கண்ணீர் அனலாய் எரிக்குதே 
நொடிகள் யுகமாய் தோன்றுதே 
மனம் உன் அன்பை தேடுதே!!! 

மனத்தில் உள்ள சோகமும் 
தவிக்கும் என் நெஞ்சையும் 
அணைத்தாலே போதுமே 
உயிர் மீண்டும் துளிர் விடுமே 

அதட்டும் உன் கோவமும் 
மிரட்டும் உன் வார்த்தையும் 
கேட்டாலே பொதுமே 
பல ஜென்மங்கள் உயிர் வாழுமே . 

இதை காதல் என்று சொல்வதா 
இல்லை ஏக்கம் என்று சொல்வதா
நித்தம் கொல்லும் இவ்வுலகில் 
உன்னோடு ஒரு நொடியேனும் 
வாழும் காலம் சொர்க்கமே . 
மீண்டும் என் ஜீவன் உயிர் வாழுமே!!!!! 



No comments:

Post a Comment