உன் நெத்தியில் இருக்கும்
வில் போன்ற புருவம் அழகு.
அந்த புருவம் கோவத்தில்
உயரும் போது மேலும் அழகு...
பார்பவர்களை சுண்டி இழுக்கும்
உன் மயக்கும் விழிகள் அழகு.
அந்த விழிகளில் கருணை கொஞ்சும்
பார்வை மேலும் அழகு...
உந்தன் சிமிட்டும் இமைகள் அழகு
அதை அலங்கரிக்கும் உன் கண்மை
மேலும் அழகு...
உன் கூறிய நாசி அழகு.
அதில் நீ ஸ்வாசிக்கும் காற்று
மேலும் அழகு...
உன் தேன்சிந்தும் இதழ்கள் அழகு.
அந்த இதழ்களில்
இழையோடும் புன்னகை
மேலும் அழகு....
உன் கார்மேக அழகிய
கூந்தல் அழகு.
அதில் சூடியுள்ள மல்லிப்பூ
மேலும் அழகு....
உன் சங்கு கழுத்து அழகு.
உன் பின் கழுத்தை முத்தமிட்டு
அலங்கரிக்கும் தங்க சங்கிலி
மேலும் அழகு....
நீ கட்டி இருக்கும் சேலை அழகு.
அந்த சேலை படர்ந்து
இருக்கும் உன் தேகம்
மேலும் அழகு...
நீ நடக்கும் நடை அழகு
நடக்கும் போது ஓசை இடும்
உன் கொலுசின் ஓசை
மேலும் அழகு...
மழை துளி கூட தன்
நிலை இழக்கும் உன்
மேனி அழகு.
உன்னை வர்ணிக்கும் போது
கவிதையும் தோற்று போவது
மேலும் மேலும் அழகு...
No comments:
Post a Comment