Tuesday, May 26, 2020

ஊடலும் தவிப்பும்



உன் மௌனத்தையும் 
கண்டு ரசித்த நான்,
உன் தன் மன குழப்பத்தை 
கண்டு வாடுகிறேன்...

உன் கோபத்தை கூட 
சகித்து கொண்ட நான், 
நீ மனச்சுமையுடன் இருப்பதை 
கண்டு உள்ளம் வேகிறேன்..

உன் பேச்சை கேட்டு நித்தம்
உயிர்த்து எழுந்த நான், 
இன்று நீ பேசாமல் இருப்பதை 
எண்ணி என் உயிர் சிதர கண்டேன்...

உன் பார்வை பட்ட மாத்திரத்தில்
மருந்தை உணர்ந்த நான், 
உன்னை காணாது போனதை எண்ணி
 என்னுள் நஞ்சு புகக்கண்டேன்...

உன் ஒற்றை வரி வார்த்தையில் 
வாழ்வின் அர்த்தம் உணர்ந்த நான், 
உன் ஒரு வார்த்தை 
கேட்க எண்ணி தவிக்கிறேன்...

தீயில் வெந்த போதும் 
மருந்தாய் இருந்த உன்னிடம் 
மனம் விட்டு பேச முடியாத நொடி 
ஆயிரம் முறை தீயில் குளிக்கிறேன்...

நா‌ன் என்ன தவறு செய்தாலும் 
என்னை கடிந்து கொள்ள உனக்கு 
அனைத்து உரிமையும் உண்டு. 
ஆனால் மீண்டும் என்னிடம் பழையபடி 
என் அன்பு தோழியாய், 
என் பாச தாயாய், 
என் உயிர் கவசமாய் 
என்னோடு பேசடி 
என் உயிர் காதலியே... 





No comments:

Post a Comment