உன் கண்ணில் உள்ளது சிரிப்பு.
அது எப்போதும் உனது சிறப்பு..
உன் சிரிப்பில் உள்ளது கனிவு
உன் பேச்சிலும் செயலிலும் உள்ளது பணிவு...
உன்னை நினைத்து காணுவர்
பலர் கனவு...
ஏக்கத்தில் அவர்களால் உட்கொள்ள
முடியாது உணவு...
உன் கூந்தலுக்கு அழகு
சேர்க்கும் காந்தள்.
உன்னை காணாது போனால்
வாழ்வே காந்தல்...
பெயர் சூட்ட தெரியவில்லை
நம்முள் மூண்ட இந்த உறவு.
நீ இருந்தால் இந்த வாழ்வே
எனக்கு பெரும் வரவு....
No comments:
Post a Comment