Tuesday, May 26, 2020

நான் மாறவா???


உன் அழகிய கண்களின் 
சுகம் அறிய 
உன் பார்வையாய் 
நான் மாறவா?.

உன் கூர்மையான விழியை 
என்றும் காக்கும் உன் 
விழி நீராய் 
நான் மாறவா? 

உன் தேன் சொட்டும் 
செவ்விதழை சுவைக்க
உன் நாவாய் 
நான் மாறவா?

உன் சிரிப்பின் சுகம் உணர 
உன் மேல் அமரும் 
பட்டாம் பூச்சியாய் 
நான் மாறவா?

உன் விரல் தீண்டும் சுகம் 
அதை நான் உணர 
உன் கருங்கூந்தலாய் 
நான் மாறவா? 

உன் கூந்தலின் வாசம்
உணர்ந்திட நீ 
சூடும் மலராய் 
நான் மாறவா? 

உன் சங்கு கழுத்தை 
அலங்கரிக்க நீ அணியும் 
உன் நகையாய் 
நான் மாறவா? 

உன் மேனியின் மென்மையை 
நான் உணர்ந்திட உன்னை 
வருடும் காற்றாய் 
நான் மாறவா? 

உன் அழகிய மார்பில் 
நான் சாய்ந்து கொள்ள 
உன் சேயாய் 
நான் மாறவா?

உன் உடலின் ஆபத்தான வளைவுகளை
 நான் கடந்து செல்ல 
நீ உடுத்தும் உன் உடையாய் 
நான் மாறவா? 

உன் தாமரை பாதத்தை 
தாங்கி கொள்ள நீ நடக்கும் 
உன் பாதையாய் 
நான் மாறவா?

சொர்க்கம் அதை அறிந்துகொள்ள 
உன் மடியில் தலை 
சாயும் ஜீவனாய் 
நான் மாறவா? 

நீ என்றும் உயிர் வாழ 
உன் ஸ்வாச காற்றாய் 
நான் மாறவா???


No comments:

Post a Comment