நான் உன்னை பற்றி எழுதியது
ஒற்றை வரி கவிதை
ஆனால் உன் பார்வையில் நீ தந்தாய்
ஓராயிரம் கவிதை!!!
உன்னை நினைக்காத நொடிகள்
மிகவும் சொர்ப்பம்.
உன் கூரிய பார்வைக்கு செய்தேன்
என்னை உனக்கு அர்ப்பணம்!!!
உன்னோடு உரையாடிய பொழுது
என் வாழ்வில் உண்டானது
வசந்த காலம்.
உன்னை நினைத்து ஏங்கிய போது
நான் அனுபவித்தது
தகிக்கும் கோடை காலம்!!!
நினைத்தாலும் உன்னை மறக்காது
என் நெஞ்சம்.
உன் மேல் உள்ள என் அன்பில்
என்றும் இருக்காது பஞ்சம்!!!
என் மனம் உன்னிடத்தில்
கொண்டதடி தஞ்சம்.
உன்னை என்றென்றும் என் மனம்
காதலால் கொஞ்சும்!!!
உன்னிடம் உரையாடும் நேரம்
எனக்கு தேவை கொஞ்சம்.
அது கிடைக்காமல் போனால் ஏக்கத்தில்
என் நெஞ்சம் அஞ்சும்!!!
மழை பொழிந்தால் வாடிய பயிரும்
புத்துயிர் பெற்றிடும்.
நீ இல்லாமல் போனால் என் நெஞ்சில்
ஏற்படும் மாறா வெற்றிடம்!!!
நீ வாழ்வில் வந்ததால் நான்
பெற்றது புத்துயிர்.
நீ என்னை பிரிந்தால் இந்த
உடலில் ஏதடி உயிர்!!!
No comments:
Post a Comment