Tuesday, May 26, 2020

காதலே நீ

வாழ்வில் எது கிடைத்தாலும் 
உன் உறவு மட்டும் போதும். 
உன் தூய அன்பில் நனைந்து இருக்கும் 
அந்த நொடி எப்போதும் வேண்டும். 
தினமும் உன்னிடம் பேசி முடித்த பின்பும்
இன்னும் பேசிட வேண்டி 
என் மனம் தூண்டும்.

காதலே காதலே நீ! 
எந்தன் மூச்சிலும் பேச்சிலும் நீ, 
நீ மட்டுமே !!!

கூரிய விழி பார்வையிலே 
நீ முறைக்கும் போதும்
விழியின் ஓரம் துளிர் விடும் 
உன் துளி புன்னகை வேண்டும் 
உன் பெயரை ஆயிரம் முறை 
சொல்லி முடித்தாலும் 
இன்னும் கோடி முறை 
மனம் கூறிட தூண்டும் 

காதலே காதலே நீ! 
எந்தன் வாழ்விலும் தாழ்விலும் நீ, 
நீ மட்டுமே !!! 

சில நேரம் எந்தன் மனம் 
தொய்வடையும் போதும் 
உன் வார்த்தை கேட்டு மீண்டும் 
எழும் விந்தை அது வேண்டும் 
உந்தன் வார்த்தைகள் கேட்டு 
நான் உலகமே மறக்கும் - அந்த 
நொடி பொழுது 
எப்போதும் வேண்டும் 

காதலே காதலே நீ! 
எந்தன் எண்ணமும் திண்ணமும் நீ, 
நீ மட்டுமே !!! 

வான் வீதியில் நான் நட்சத்திரங்களை
 எப்போது காணும் போதும் 
என் நினைவில் தோன்றும் உந்தன்
சிரிப்பு அது வேண்டும்
என்னிடம் நீயும் கோபம் கொள்ளும் போதும் சில நொடியில் 
அதை மறந்து காட்டும் 
பரிவு அது வேண்டும்

காதலே காதலே நீ! 
என்றும் என் காதலும் வாழ்க்கையும் நீ, 
நீ மட்டுமே! 
காதலே காதலே நீ! 
என்றும் என் உயிரிலும் ஒவ்வொரு அணுவிலும் நீ, 
நீ மட்டுமே!!  

அவள் அழகு



உன் நெத்தியில் இருக்கும் 
வில் போன்ற புருவம் அழகு.
அந்த புருவம் கோவத்தில் 
உயரும் போது மேலும் அழகு...

பார்பவர்களை சுண்டி இழுக்கும் 
உன் மயக்கும் விழிகள் அழகு.
அந்த விழிகளில் கருணை கொஞ்சும்
பார்வை மேலும் அழகு...

உந்தன் சிமிட்டும் இமைகள் அழகு 
அதை அலங்கரிக்கும் உன் கண்மை 
மேலும் அழகு... 
உன் கூறிய நாசி அழகு.
அதில் நீ ஸ்வாசிக்கும் காற்று 
மேலும் அழகு...

உன் தேன்சிந்தும் இதழ்கள் அழகு.
அந்த இதழ்களில் 
 இழையோடும் புன்னகை 
மேலும் அழகு....

உன் கார்மேக அழகிய 
கூந்தல் அழகு.
அதில் சூடியுள்ள மல்லிப்பூ 
மேலும் அழகு....

உன் சங்கு கழுத்து அழகு. 
உன் பின் கழுத்தை முத்தமிட்டு 
அலங்கரிக்கும் தங்க சங்கிலி 
மேலும் அழகு....

நீ கட்டி இருக்கும் சேலை அழகு.
அந்த சேலை படர்ந்து 
இருக்கும் உன் தேகம் 
மேலும் அழகு...

நீ நடக்கும் நடை அழகு
நடக்கும் போது ஓசை இடும் 
உன் கொலுசின் ஓசை 
மேலும் அழகு...

மழை துளி கூட தன் 
நிலை இழக்கும் உன் 
மேனி அழகு.
உன்னை வர்ணிக்கும் போது 
கவிதையும் தோற்று போவது 
மேலும் மேலும் அழகு...



நான் மாறவா???


உன் அழகிய கண்களின் 
சுகம் அறிய 
உன் பார்வையாய் 
நான் மாறவா?.

உன் கூர்மையான விழியை 
என்றும் காக்கும் உன் 
விழி நீராய் 
நான் மாறவா? 

உன் தேன் சொட்டும் 
செவ்விதழை சுவைக்க
உன் நாவாய் 
நான் மாறவா?

உன் சிரிப்பின் சுகம் உணர 
உன் மேல் அமரும் 
பட்டாம் பூச்சியாய் 
நான் மாறவா?

உன் விரல் தீண்டும் சுகம் 
அதை நான் உணர 
உன் கருங்கூந்தலாய் 
நான் மாறவா? 

உன் கூந்தலின் வாசம்
உணர்ந்திட நீ 
சூடும் மலராய் 
நான் மாறவா? 

உன் சங்கு கழுத்தை 
அலங்கரிக்க நீ அணியும் 
உன் நகையாய் 
நான் மாறவா? 

உன் மேனியின் மென்மையை 
நான் உணர்ந்திட உன்னை 
வருடும் காற்றாய் 
நான் மாறவா? 

உன் அழகிய மார்பில் 
நான் சாய்ந்து கொள்ள 
உன் சேயாய் 
நான் மாறவா?

உன் உடலின் ஆபத்தான வளைவுகளை
 நான் கடந்து செல்ல 
நீ உடுத்தும் உன் உடையாய் 
நான் மாறவா? 

உன் தாமரை பாதத்தை 
தாங்கி கொள்ள நீ நடக்கும் 
உன் பாதையாய் 
நான் மாறவா?

சொர்க்கம் அதை அறிந்துகொள்ள 
உன் மடியில் தலை 
சாயும் ஜீவனாய் 
நான் மாறவா? 

நீ என்றும் உயிர் வாழ 
உன் ஸ்வாச காற்றாய் 
நான் மாறவா???


என் சிறுக்கி மவளே


என்னை முறுக்கு ஏற வைத்த 
சிறுக்கி மவளே
உன் வளைவில் சறுக்க வைத்த 
கிறுக்கி மவளே
என் இதய துடிப்பை எகிற வைத்த 
சிறுக்கி மவளே
என் ஆண்மையை ஆட்கொள்ள வந்த 
சிறுக்கி மவளே
உன் பெண்மையின் மேன்மையில் 
என் மனதை திருடிய 
சிறுக்கி மவளே
உன் நினைவில் என்னை வாட்டி எடுக்கும் 
சிறுக்கி மவளே
தனிமையின் தாக்கம் தாங்க மாட்டாமல் 
என்னை தவிக்க விட்ட 
சிறுக்கி மவளே
அருகில் இருந்தும் தொலைவில் சென்ற 
சிறுக்கி மவளே
உன் பார்வையின் கிரக்கத்தில் 
என்னை கிறங்கடித்த 
கிறுக்கி மவளே
என் வாழ்வே நீதானடி 
என் அழகிய
சிறுக்கி மவளே!!!


என்னவளே நீ ஒரு கவிதை


 
நான் உன்னை பற்றி எழுதியது 
ஒற்றை வரி கவிதை
ஆனால் உன் பார்வையில் நீ தந்தாய்
 ஓராயிரம் கவிதை!!!

உன்னை நினைக்காத நொடிகள் 
மிகவும் சொர்ப்பம்.
உன் கூரிய பார்வைக்கு செய்தேன்
என்னை உனக்கு அர்ப்பணம்!!!

உன்னோடு உரையாடிய பொழுது 
என் வாழ்வில் உண்டானது 
வசந்த காலம்.
உன்னை நினைத்து ஏங்கிய போது 
நான் அனுபவித்தது 
தகிக்கும் கோடை காலம்!!!

நினைத்தாலும் உன்னை மறக்காது 
என் நெஞ்சம்.
உன் மேல் உள்ள என் அன்பில் 
என்றும் இருக்காது பஞ்சம்!!!

என் மனம் உன்னிடத்தில் 
கொண்டதடி தஞ்சம்.
உன்னை என்றென்றும் என் மனம்
 காதலால் கொஞ்சும்!!!

உன்னிடம் உரையாடும் நேரம் 
எனக்கு தேவை கொஞ்சம்.
அது கிடைக்காமல் போனால் ஏக்கத்தில் 
என் நெஞ்சம் அஞ்சும்!!!

மழை பொழிந்தால் வாடிய பயிரும்
புத்துயிர் பெற்றிடும்.
நீ இல்லாமல் போனால் என் நெஞ்சில்
ஏற்படும் மாறா வெற்றிடம்!!!

நீ வாழ்வில் வந்ததால் நான் 
பெற்றது புத்துயிர்.
நீ என்னை பிரிந்தால் இந்த 
உடலில் ஏதடி உயிர்!!!


உன் சிறப்பு



உன் கண்ணில் உள்ளது சிரிப்பு.
அது எப்போதும் உனது சிறப்பு..

உன் சிரிப்பில் உள்ளது கனிவு
உன் பேச்சிலும் செயலிலும் உள்ளது பணிவு... 

உன்னை நினைத்து காணுவர்
பலர் கனவு...
ஏக்கத்தில் அவர்களால் உட்கொள்ள
முடியாது உணவு...

உன் கூந்தலுக்கு அழகு 
சேர்க்கும் காந்தள். 
உன்னை காணாது போனால் 
வாழ்வே காந்தல்...

பெயர் சூட்ட தெரியவில்லை 
நம்முள் மூண்ட இந்த உறவு.
நீ இருந்தால் இந்த வாழ்வே 
எனக்கு பெரும் வரவு....

ஊடலும் தவிப்பும்



உன் மௌனத்தையும் 
கண்டு ரசித்த நான்,
உன் தன் மன குழப்பத்தை 
கண்டு வாடுகிறேன்...

உன் கோபத்தை கூட 
சகித்து கொண்ட நான், 
நீ மனச்சுமையுடன் இருப்பதை 
கண்டு உள்ளம் வேகிறேன்..

உன் பேச்சை கேட்டு நித்தம்
உயிர்த்து எழுந்த நான், 
இன்று நீ பேசாமல் இருப்பதை 
எண்ணி என் உயிர் சிதர கண்டேன்...

உன் பார்வை பட்ட மாத்திரத்தில்
மருந்தை உணர்ந்த நான், 
உன்னை காணாது போனதை எண்ணி
 என்னுள் நஞ்சு புகக்கண்டேன்...

உன் ஒற்றை வரி வார்த்தையில் 
வாழ்வின் அர்த்தம் உணர்ந்த நான், 
உன் ஒரு வார்த்தை 
கேட்க எண்ணி தவிக்கிறேன்...

தீயில் வெந்த போதும் 
மருந்தாய் இருந்த உன்னிடம் 
மனம் விட்டு பேச முடியாத நொடி 
ஆயிரம் முறை தீயில் குளிக்கிறேன்...

நா‌ன் என்ன தவறு செய்தாலும் 
என்னை கடிந்து கொள்ள உனக்கு 
அனைத்து உரிமையும் உண்டு. 
ஆனால் மீண்டும் என்னிடம் பழையபடி 
என் அன்பு தோழியாய், 
என் பாச தாயாய், 
என் உயிர் கவசமாய் 
என்னோடு பேசடி 
என் உயிர் காதலியே... 





தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ பட்ட துன்பங்கள் யாவும் தூள்தூளாக...

தவறிய வாய்ப்புக்கள் உன்னிடம் மீண்டும் வந்து சேர்ந்திட ...

நீ அடைந்த அனுபவங்கள் உனது ஆசானாக....

நீ கடந்து வந்த பாதைகள் யாவும் 
உன் வாழ்வின் பாடமாக...

சந்தித்த தடைகள் யாவும் நீ தாண்டிச் செல்லும் படிகளாக...

இனி வருங்காலம் அனைத்தும் உன் வாழ்வில் இன்பமாக...

உன் பெருமை சேர்க்கும் பிள்ளைகளால் நீ என்றும் பேரானந்தம் அடைய...

உன் அன்பு கணவருடன் என்றும் நீங்காத காதலுடன்... 

தமிழைப் போல் என்றும் தழைக்கும் மங்காத புகழுடன்...

செயற்கரிய செயல்கள் செய்து நல்ல சேயாக, 
நல்ல சகோதரியாக, மனைவியாக என்றும் நீடூழி வாழ்ந்திட...

இன்று பிறந்த நாள் காணும் என் இனிய தோழிக்கு  மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...



நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் நீ காட்டியது அன்பு ! 
உன்னிடம் இருப்பது பல உயரிய பண்பு! 
எங்கும் எதிலும் நீ காட்டுவது அர்ப்பணிப்பு! 

எடுத்த செயலில் எப்போதும்
இருப்பது உன்தன் முனைப்பு! 
வெற்றி பெறும் வரை ஓயாது 
உன் இதயத் துடிப்பு! 
இது யாவும் நீ வாழ்வில் 
கற்ற ஒப்பற்ற படிப்பு! 

உன் குடும்பத்திலும் சமூகத்திலும் 
நீ கொண்டுள்ளது 
ஒரு பிணைப்பு!
எங்கும் எப்போதும் நீ பெறுவாய் 
பல நன்மதிப்பு!
எப்போதும் உன் முகத்தில் 
இருப்பது ஒரு 
குழந்தையின் சிரிப்பு!

உன்னை காணும் போது 
உன் இதய தேவதைக்கு 
வருவது காதல் பூரிப்பு!
எதிலும் நீ செயல் புரிவது 
ஆழ்ந்த பகுப்பு! (analysis)
அதனால் நீ பெற்றது பல 
ஞானத்தின் தொகுப்பு!

உனக்கு நாங்கள் கூறுவது 
உன் பிற‌ந்தநா‌ள் வாழ்த்தின் 
அன்பு அறிவிப்பு!!!!!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!!!

வாழ்க வளமுடன்!!!!!


என்னில் வந்தவள்



தாகத்தில் தவித்தவனுக்கு 
நீராய் வந்தாய்! 
வழி தேடி தொலைந்த போது 
வழியாய் வந்தாய்! 
வலியில் துடித்த போது 
மருந்தாய் வந்தாய்! 
கண்ணீரில் நனைந்த போது துடைக்கும் 
விரலாய் வந்தாய்! 
துவண்டு விழும் போது தாங்கும்
தோளாகளாய் வந்தாய்!
உறங்கும் போது இனிய 
தாலாட்டாய் வந்தாய்!
பசித்த போது ருசியான 
உணவாய் வந்தாய்!
பயத்தில் உறைந்த போது 
அணைக்கும் கரங்களாய் வந்தாய்!
வாழ்வில் விழும் போது பிடித்து 
காக்கும் கரங்களாய் வந்தாய்!
என்னை எனக்கே எடுத்து காட்டும்
 கண்ணாடியாய் வந்தாய்!
பாலைவனமாய் இருந்த என் 
வாழ்வை சோலைவனமாய் மாற்ற
நீயே வந்தாய்!
என் வாழும் காலங்களில் 
என் வசந்த காலமாய் 
நீயே வந்தாய்!
நான் வீழ்ந்த போதெல்லாம் 
என் ஆபத்பாந்தவளாய் 
நீயே வந்தாய்!
நான் எழும் போது மட்டும் 
என்னை தவிக்க விட்டு 
ஏனடி சென்றாய்!!!!


இனியவளே


இனியவளே!!! 
உன்னை நினைக்கையில் உள்ளத்தில் தென்றல் வீசுதடி 
என்னை அறியாமல் இதழ் ஓரம் புன்சிரிப்பு இழையோடுதடி
வாழ்வின் மீது புது நம்பிக்கை பிறக்குதடி

நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் என் தாரகையே!!! 
உன் மன சஞ்சலங்கள் யாவும் தீரும் நேரம் வந்துவிட்டதடி 
உன் துன்பங்கள் யாவும் துவண்டு ஓடும் நேரம் வந்துவிட்டதடி
உன் குறைகள் யாவும் நிறையாக மாறும் நேரம் வந்துவிட்டதடி 
உன் குழப்பங்கள் யாவும் குழம்பி ஓடும் நேரம் வந்துவிட்டதடி 

உன்னை தூற்றிவோர் முன் அடங்கா சக்தியாய் ஊற்று எடு 
உன்னை இகழ்ந்தோர் முன் வான் முட்டும் புகழ் தொடு 
உன்னை எட்டி மிதித்தவர் முன் சூறாவளியாய் அவர்களை தட்டி உச்சம் தொடு 
உன்னை தூற்றியவரை ஒரு கை பார்க்கும் துர்க்கை நீ 
உன் மேல் காட்டம் கொண்டவரை காலில் மிதிக்கும் காளி நீ 
அறிவிலார் கூறும் அறிவீன வார்த்தையை தவிர்க்கும் அம்பிகை நீ 
உன்னை சார்ந்தோரை அரவணைத்து செல்லும் அழகிய சக்தி நீ 
பாறையின் இடையே துளிர் விடும் விருட்சமாக 
பூமியின் அடியில் நிற்காமல் ஓடும் ஊற்றாக 
புவியின் விசைக்கு எதிராக வெடித்து சிதறும் எரிமலை பிழம்பாக 
கட்டிற்கு அடங்கா அணையையே பெயர்த்து சீறிப் பாயும் காட்டாறாக 
விண்ணைத்தாண்டி வீற்றி செல்லும் விண்கலமாக நீ எழுவாய், உயர்வாய், ஒளிர்வாய்!!!! 

நெருக்கம்

 

உன்னை நெருங்கி உன் விழியோடு 
விழி பார்த்த நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது 
இந்த பிரபஞ்சத்தில் ஏற்பட்ட 
முதல் மகா வெடிப்பு!!! (big bang) 

என் கரம் நீண்டு உன் 
கரம் பற்றிய நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
என் ஒவ்வொரு அணுவிலும் பாய்ந்த 
பிரபஞ்சத்தின் நேர்மறை ஆற்றல்!!! 

உன் விரலோடு விரல் 
கோர்த்த நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
என்னுள் நிகழ்ந்த வேதியல் மாற்றம் 
காலத்தையும் கடந்து தேட வைக்கும் 
உன் உறவை!!! 

உன் ஸ்வாச காற்று என் 
மீது பட்ட நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
என்னை சுண்டி இழுக்கும் உன் 
எல்லையற்ற ஈர்ப்பு விசை!!! 

உன்னை தொட்டு உன் 
ஸ்பரிசம் உணர்ந்த நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
பால் வெளி மண்டலத்தின் பல கோடி 
நட்சத்திரங்களின் சிமிட்டும் சிரிப்பு!!! 

உன் முத்த மழையில் நான் 
மொத்தம் நனைந்த நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
இருவது லட்சம் ஆண்டுகள் இடைவிடாது 
பூமியில் பெய்த மழையின் குளிர்ச்சி!!! 

உன்னை இறுக பற்றி 
இறுக்கி அணைத்த நெருக்கத்தில் 
நான் உணர்ந்து கொண்டது
மனிதன் பரிணாம வளர்ச்சியை போல 
பன்மடங்கு வளர்ந்த, நம் மீது 
நாம் கொண்டிருக்கும் காதல்!!! 

உந்தன் நெருக்கத்தில் என்னை 
பிரபஞ்சத்தை உணர வைத்த 
என் மனதிற்கு இனியவளே!!! 
நீயே இந்த பிரபஞ்சத்தின் ஈடு-இணை 
இல்லா எல்லையற்ற சக்தி!!!!! 



கல்லறை



குழந்தை விளையாடி உடைத்த பொம்மை
பொய் சேரும் கிடங்கு பொம்மைக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

நைந்து போன துணிகள்
தூக்கி எறியப்படும் போது அது துணிக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

விபத்தில் சிக்கி சின்னாபின்னமான வண்டி
எடைக்கு போடப்படுவது அந்த வண்டிக்கு
கொடுக்கப்பட்ட கல்லறை

செடியில் பூக்கும் பூவின் மொட்டு,
மொட்டிலேயே கருகி விழுவது அந்த
மொட்டிற்கான கல்லறை

பட்டாம்பூச்சியாய் மாறும் பொருட்டு
புழு தனக்கே எழுப்பி கொள்வது
அதற்கான கல்லறை

சிறுவர் பருவத்தில் இருந்து
பதின் வயது செல்வது,
குழந்தை பருவத்திற்கு எழுப்பப்பட்ட கல்லறை

மின்னஞ்சல் கைபேசி வந்ததால்
தந்தி சேவைக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

மரபணு மாற்றிய விதையை
பயிரிட்டதால் பாரம்பரிய விதைக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

உயிரோடு இருக்கும் மரத்தை வெட்டி
இறந்த மனிதனுக்கு செய்த சவப்பெட்டி
மரத்துக்கு மனிதன் செய்த கல்லறை

உயிர்நண்பன் நமக்கு துரோகம்
செய்யும்பொது நம்பிக்கைக்கு அங்கு
எழுப்பப்பட்டது கல்லறை

காதலர்கள் பிரிய நேரிடும் பொது
இதயத்தின் சாட்சியாய் மலர்ந்த
அந்த காதலுக்கு எழுப்பப்பட்டது கல்லறை

தம்பதியினர் தங்களுக்குள் உண்மை  
தவறும் பொது அந்த அற்புத உறவுக்கு
எழுப்பப்பட்டது கல்லறை

பெண்களை வன்கொடுமை செய்யும்
ஆண்கள் ஓவ்வொருவனுக்கும் அது
அவன் ஆண்மைக்கு எழுப்பப்படும் கல்லறை

சுயநலத்திற்காக நீதி தவறி, சொந்த மக்களை வதைக்கும்
அரசன்(தலைவன்) ஓவ்வொருவனுக்கும் அது
அவன் நெறிக்கு எழுப்பப்படும் கல்லறை

அரசு ஊழியர் கடமையை ஆற்ற
கையூட்டல் (லஞ்சம்) பெறுவது அவர்
நேர்மைக்கும் நாணயத்திற்கும் 
எழுப்பப்படும் கல்லறை

காசுக்காக மருத்துவத்தை விற்கும் வியாபாரி,
மக்களின் ஆரோக்கியத்திற்கு 
எழுப்பப்படும் கல்லறை

கடமையை மறந்து நேர்மை தவறும் ஆசிரியர்
அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு
எழுப்பப்படும் கல்லறை

இருக்கும் வரை எல்லா ஆட்டமும் ஆடி, அடங்கி,
பின்னர் கடைசியில் மனிதன் நினைத்தாலும்
தடுக்க முடியாமல் போய் சேரும் இடம்
அவனிற்கான கல்லறை 

அவன் விஞ்ஞானி


அணுவை பிரித்து துகளை உறித்து உயிரை உருவாக்கும் பிரம்மன் அவன்...

அணுவையே ஆட்டுவிக்கும் பூவுலகின் பரமன் அவன்....

நேர் கொண்ட பார்வை கொண்ட தீரன் அவன்... 

நேர்மறையான அணுவின் மைய கருவில் மின்னும் நேர்மின்னி (proton) அவன்...

எதிர் வினையை நேர்மறை ஆற்றலாக செயல் படுத்தும் நொதுமி (neutron) அவன்...

எதிரிகளின் எதிர் வினையை எதிர்க்கும் எதிர்மின்னி (electron) அவன்...

நவீன காலத்து கலியுக சித்தன் அவன்...

சித்தத்தையும் சித்தியில் ஆழ்த்தும் சக்தி பெற்ற சிவமயம் ஆனவன் அவன்...

காலனை காலத்தால் வெல்ல பிறப்பு எடுத்த காலதேவன் அவன்... 

மெய்யுடன் உயிரினை சேர முயற்சிக்கும் மெய்ஞானி அவன்.... 

அவன் யார் என்பதை ஒவ்வொரு வினாடியும் அறிய விரையும் விஞ்ஞானி அவன்...



அவள் தான் பெண்




ஆண்கள் வாழ்வில் 
முடிசூடா ராணி அவள். 
பருவம் அடைந்த போதும் 
தந்தைக்கு ஒரு பதின் வயது 
தாயாக இருப்பவ‌‌ள் அவள். 
தன் மூலம் உலகிற்கு வந்த போதும் 
தன் தாயை நினைவு படுத்தும் 
செல்ல மகள் அவள்!!! 

தொட்டதற்கு எல்லாம் சண்டை இடும் 
அழகிய பிசாசு அவள். 
துன்பத்தில் இருக்கும் போது தோள் 
கொடுக்கும் தோழி அவள். 
அம்மா இல்லாத போது கனிவாக 
கவனிக்கும் தாய் ஆனவள் அவள். 
வாழ்க்கை பட்டு செல்லும் போது 
கண்ணில் நீர் துளியுடன் 
வெறுமையை தந்து செல்லும் 
அழகிய சகோதரி அவள்!!! 

வளர்ந்த வீட்டை விட்டு, 
உறவை விட்டு கட்டியவர் ஒன்றே 
வாழ்க்கை என வந்தவள் அவள். 
விடியல் முன் எழுந்து வீட்டின் 
அனைத்து பணியும் சிறப்பாய் செய்யும்
வீட்டின் தென்றல் அவள். 
புகுந்த வீட்டின் தேவை அறிந்து 
சேவை பல புரிந்து 
அவனில் பாதி இவள் என 
வாழும் துணைவி அவள் !!! 

தங்கள் காதலின் சாட்சியாய் 
உருவான உயிரை இவ்வுலகிற்கு 
கொண்டு வருவதற்கு நித்தம் பல 
துன்பங்களையும் இன்பமாய் 
எதிர்கொள்பவள் அவள். 
தன் தேவையை விடுத்து 
தன் சேயின் தேவை அறிந்து 
உயிராய் கலந்தவள் அவள். 
பல இரவு தன் தூக்கம் விட்டு 
பிள்ளையை காத்து வளர்க்கும் 
மனிதகுல தெய்வம் அவள். 
மூப்பு எய்த போதும் ஒவ்வொரு 
மகனின், மகளின் உலக அழகி 
ஆகச்சிறந்த தாய் அவள்!!! 

அலுவலகம் சென்று 
குடும்பத்திற்கு உழைக்கும் 
கணவனுக்கு சரி நிகராய் 
அலுவலகத்திலும் வீட்டிலும் 
சளைக்காமல் உழைப்பவள் அவள். 
நித்தம் பல தடைகள் கண்டபோதும்
தடைகள் பல கடந்து 
திறம்பட உயர்பவள் அவள். 
சமூகத்தில் பதினைந்தாலோ, 
ஐம்பத்தி ஐந்தாலோ  சில வேளையில் 
வேட்டையாடப் பட்டாலும் நிமிர்ந்த 
நன்நடையுடன் முன்னேறும் 
புதுமைப்பெண் அவள்!!! 

பூமியில் மட்டுமின்றி 
விண்ணிலும் கால்தடம் பதித்து 
பூமியை பூப்பந்தாக்கி 
விளையாடும் வீராங்கனை அவள். 
பருவத்தில் வளையலை தேடியவள்
 இன்று வலைதளத்தில் அறிவியல் 
தேடும் அறிவினாள் அவள். 
பொறுமை எனும் அரிய 
ஆயுதம் கொண்டு பெருமைகள் பல 
பெற்றவள் அவள். 
வறுமை வந்து வாட்டும் போதும் 
சிறுமை நாடா தன்மான 
சிங்கப்பெண் அவள்!!! 

மனிதகுலம் தழைத்து ஓங்க 
உலகின் சக்தியாக, 
பொறுமையின் வடிவாக, 
அறியாமை என்ற இருள் அகற்றி, 
வரும் சந்ததிகள் ஒளிர்ந்து மின்ன 
என்றும் காரணியாய் இருக்கும் 
மாசற்ற மாணிக்கம் அவள்!!! 

பெண் தெய்வங்கள் அனைவருக்கும் 
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!!


Thursday, May 21, 2020

முதுமை


இளமை என்பது அற்புதம் - ஆனால்
முதுமை என்பது ஒரு வரம் 

காலத்தின் ஓட்டத்தில் சூறாவளியாய் சுழன்று 
இந்த இயந்திர வாழ்வில் இருந்து - இன்று
தனக்கான நியாயமான ஆசைகளை வயதிற்கேற்ற விருப்பங்களை
நோக்கி செல்லும் பருவம் !!! 

ஒருவேளை உணவை கூட சரியாக உண்ணாமல் 
பொருள் ஈட்டும் பொருட்டு பம்பரமாய் சுற்றியவர் - இன்று
தனக்கென பொறுமையாக தன்னை தானே கவனித்துக்கொள்ளும்
சுயாதீனமான* பருவம் !!!

இத்தனை வருடம் தான் கற்றவற்றை கொண்டு
திறம்பட செயல்கள் பல செய்து – இன்று
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னைத்தானே
மீண்டும் தகவமைக்கும்* பருவம் !!!

கால ஓட்டத்தில் கவனிக்க தவறிய பலவற்றை
வாழ்வின் மிச்சத்தில் பொறுமையாக – மேலும்
கவனமாக நல்ல முறையில் புதிய கண்ணோட்டத்தில்
உலகை அணுகவைக்கும் பருவம் !!!

பிறர் தவறை பெரிது படுத்தி பேசி
பலர் மனதை நோகச் செய்து - இப்போது
தவரையும் நயமாக அணுகி லயமாக சுட்டிக்காட்டி
தீர்வை அணுகும் பருவம் !!!

தான் பெற்ற பிள்ளையுடன் கூட நேரம்
ஒதுக்க முடியாமல் போன தருணம் – இன்று
தன் பிள்ளையின் பிள்ளையுடன் குழந்தையாய் மாறும்
குழந்தைத்தன்மை காட்டும் பருவம் !!!

முதலாம் தலைமுறை தொழில்நுட்பம் உதவி
கொண்டு தன் தொழிலை புரிந்து – இன்று
தன் பேரப்பிள்ளைகள் மூலம் இன்றைய தலைமுறையின்
தொழில்நுட்பம் கற்கும் பருவம் !!!

கண்டிப்புகள் பல காட்டி, துல்லியம் என்ற
அளவுகோலை அளந்த மனது – இன்று
துல்லியம் அவரவர் மனதை பொறுத்தது என்று
வாழ்வை உணரும் பருவம் !!!

காலத்தின் சுழற்சியில் காதோரம் நரைக்கும்
முடியை மை பூசிய கைகள் – இன்று
நரை என்பது அனுபவத்தின் குறியீடு என்று
தெளிவு காணும் பருவம் !!!

மன அழுத்தத்தில் எரிச்சலுடன் மனைவி மற்றும்
குழந்தைகளை கையாண்ட மனது – இன்று
தன்னுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த உற்ற துணையை
வாஞ்சையோடு பார்க்கும் பருவம் !!!

வாழ்வின் ஓட்டத்தில் பல சூறாவளியை, பல
காட்டு வெள்ளத்தை கடந்து வந்து – இன்றுவரை
மூழ்காமல் அதையெல்லாம் தாண்டி, எதிர்நீச்சல் இட்டு வாழ்வின்
பெட்டகமாய் விளங்கும் பருவம் !!!

உடலை வருத்தி குடும்பத்திற்கு ஓடாய் தேய்ந்து
வாழ்வை கடந்து வந்து – இன்று
உடலில் தளர்ச்சி,நோய் வந்து தாக்கிய போதும்
உள்ளத்தால் தளராத பருவம் !!!

வருடங்கள் பல கடந்து அலுவலக
விதிப்படி ஓய்வு பெற்ற போதும் – இன்றும்
மனதிற்கு ஓய்வு அளிக்காமல் மன வலிமையுடன்
புதியபாதை காணும் பருவம் !!!

மெல்லிய உடலும் அழகிய தோலும் அழகு
என்று கொண்டாடிய மனது – இன்று
சுருக்கத்தின் ஈடே உள்ள அழகையும் சிரிப்பையும்
ஸ்ரிங்கார ரசமாய் ரசிக்கும் பருவம் !!!

குழந்தைக்கு குழந்தையாக
வல்லுநர்க்கு வல்லுநராக
முதியவர்க்கு முதியவராக
தனித்தோர்க்கு ஆதரவாக
எந்த வயதினருக்கும் தோழராக
வாழ்வில் நம்பிக்கை கொண்டவராக வாழ்பவரை,
எந்த தலைமுறையோ, காலமோ ஆட்கொள்வதில்லை !!!

முதியவர்கள் - 
பூமிக்கு பாரமல்ல அவர்கள் தலைமுறையின் பாலங்கள்
சுணங்கியவர்கள் அல்ல அவர்கள் உலகின் சமகால சரித்திரங்கள்
தள்ளாமை கொண்டவர்கள் அல்ல தவறக்கூடிய இவ்வாழ்வின் நங்கூரங்கள்
குழந்தைகள் அல்ல அவர்கள் குழந்தை தன்மை கொண்டவர்கள்
தன்னை மறந்தவர்கள் அல்ல நாம் மறந்த மரபுவழி மருத்துவர்கள்
ஆரோக்கியமற்றவர்கள் அல்ல அவர்கள் நமக்கு இருக்கும் வாழும் அகராதிகள்

இன்றைய முதியவர்கள் நேற்றைய இளைஞர்கள்;
இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள்
ப்ரபஞ்சம் ஒரு எரிவளைத்தடு* போன்றது.
நாம் செய்யும் செயல் நம்மை மீண்டும்
வந்து சேரும்- அவை நல்லதாயினும் சரி தீயதாயினும் சரி
அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல – நாம்
அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்கள்

வயது என்பது வெறும் எண் மட்டுமே. 
எண்ணத்தில் முதிர்ச்சியும் உள்ளத்தில் இளமையும் கொண்டவர்
எண்பது வயதிலும் அவர் மூப்பர் அல்ல
அவர் எண்பது வயது இளைஞர்

மொத்தத்தில் முதுமை என்பது
மு - முதிர்ச்சியான** எண்ணத்துடன்
து- துன்பங்கள் பல கடந்து வாழ்வின் பாலமாய்
மை- மையப் புள்ளியாய் விளங்கும் பருவம் !!!!!

நன்றி !!!!!!


* சுயாதீனமான - independent
* எரிவளைத்தடு - boomerang
* தகவமைக்கும் - adaptation / adapting

** முதிர்ச்சியான - matured thoughts 






நீர்


ஜல வாயுவின் இரு மூலகூறுக்கும், 
பிராண வாயுவின் ஒரு மூல கூறுக்கும், 
ஏற்பட்ட கலப்பு திருமணத்தில் 
பிறந்த குழந்தை நீர் !!!

எரிமலை பெரு வெடிப்பின் வெப்பத்தில் 
மேகதுடன் ஏற்பட்ட கலப்பில்
மழை மேகத்தின் பலவருட பிரசவத்தில் 
பூமிக்கு வந்தவள் நீர் !!!

உன் அரவணைப்பில் பூமியில் 
தோன்றிய உயிர்கள் எத்தனையோ
நீரின்றி அமையாது உலகு என்ற 
சொல்லின் உண்மை நீர்!!! 

பசுமை பூத்த காடுகளும், 
ஓங்கி வளர்ந்த மரங்களும் 
பூத்து குலுங்கும் பூக்களும் 
ஓரணு உயிரி முதல் மனிதன் வரை 
இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் 
யாவர்க்கும் தாய் நீர் !!! 

உந்தன் வடிவங்கள் தான் எத்தனை 
மூன்றில் ஒரு பங்கு கடலாக 
ஊரின் அன்றாட தேவைக்கு ஊருணியாக 
உன்னை வெட்டி எடுத்து அருந்தும் கிணறாக 
குலமக்கள் தேவை பூர்த்திக்கு குளமாக 
மழைநீர் தேக்கி வைக்கும் குட்டையாக 
மிகையான நீரை தேக்கி வைக்கும் ஏரியாக 
தாழ்பகுதிக்கும் குடை அளிக்கும் ஆறாக 
அனைவரையும் என்றும் வாழ்விக்கும் 
அமுதசுரபி நீர் !!!  

கலங்காத தெளிந்த நீரோடை நீர் - 
ஆனால் கோவம் கொண்டால் 
ஊரையே அழிக்கும் காட்டாறு நீர்!!! 
உலகின் பரம்பொருள் ஈசன் அவன் 
சிரசில் சூடிய கங்கை நீர்!!! 

உன்னை கட்டி அணைக்க முடியாததால் 
அணைகட்டி உன்னை தேக்கி வைத்து 
உன் சமரசத்தின் மூலம் உருவாக்கிய 
மின்சாரத்தின் சாரம் நீர் !!! 

மனிதரின் சரீரத்தில் அறுபது பங்கு நீர் 
அமிழ்து என்பதற்க்கு ஏற்றபடி உமிழ் நீராக  
உழைப்பின் உயர்வால் வரும் வியர்வை நீராக
உண்ட உணவை செரிக்கும் பித்த நீராக 
கர்ப்பத்தில் சிசுவை தாங்கும் பனிக்குட நீராக 
மூளை செயல்பாட்டின் மூலக் கூராக
இவ்வாறு மனிதனுடன் பல வகையில் 
பின்னிப் பிணைந்த அற்புதம் நீர் !!! 

ஊர் சிறக்க உள்ள ஏரியில் உன் 
பை பெருக்க அதை கொல்லும் மனிதா 
நீர்மகள் சினம் கொண்டால் உன் 
அஸ்தி கூட மிஞ்சாது என்பதை அறிவாயா நீர்??? 

குலத்தை காக்க வெட்டிய குளத்தை 
மூடி அதன்மேல் 
அடுக்கு மாடியை கட்டும் மானிடா 
குளத்தை அழித்தால் உன் குலத்தை 
அழிக்கும் என்பதை அறிவாயா நீர்??? 

நீர் மேலாண்மை மறந்த மனிதா 
வேளாண்மைக்கு கூட நீரில்லா அவலம் 
அதற்கு உன் பேராசை தான் காரணம் 
என்பதை உணர்ந்தாயோ நீர்??? 

சதுப்பு நிலத்தில் குப்பைகளை நிரப்பி
நிலத்தை பாழ் செய்த மனிதா 
மழைவெள்ளம் ஊர் புகுந்து தாண்டவம் 
ஆடும் நிலையை உணர்ந்தாயோ நீர்??? 

பணத்தை தண்ணி போல் செலவழிக்க 
தயக்கம் காட்டும் மனிதா 
தண்ணியையே இனி பணத்தை போல 
செலவழிக்க பழக காற்றாயோ நீர்??? 

பஞ்சபூதத்தில் குளிர்ச்சி நீர் 
உயிர்கள் வளர்ச்சியின் ஆதாரம் நீர் 
நம் அனைவரின் தேவைக்கும் அடிப்படை நீர் 
வாழ்க்கை வாழ முக்கிய தேவை நீர் 
உழவுக்கு தேவை நீர் 
உடலுக்கும் தேவை நீர் 
நம் தாகம் தணிக்கும் அமுதம் நீர் 
இதை உணராவிட்டால் வாழ்வில் என்றும் கண்(நீர்)ணீர் !!! 

நீர் காப்போம்!!!! பார்* காப்போம்!!!!

ந‌ன்றி!!! 


*பார் - உலகம் 

ஓவியம்


ஒரு தோற்றத்தின் ஒத்த வரைவு 
ஒன்றை பற்றி இருந்து அதோடு 
ஒத்திருப்பது ஓவியம். 

மனிதன் மட்டும் இன்றி 
பிரபஞ்சம் அனைத்திற்கும் 
பொதுவானது ஓவியம். 

பால் வெளி மண்டலமும் 
நட்சத்திர கூட்டமும் 
சூரிய குடும்பமும் 
கிரகங்களின் சஞ்சாரமும் 
பிரபஞ்சத்தின் ஓவியம். 

வானமும் மேகமும் வானத்தின் 
ஊடே சஞ்சரிக்கும் சூரியனும், 
சந்திரனும் ஆகாய நிறங்களும் 
விண் தீட்டிய ஓவியம். 

காலை நேர கதிரவனும் 
விடியலில் பறக்கும் பறவைகளும் 
இரவில் கீச்சிடும் விட்டில் பூச்சிகளும்
குறிஞ்சி, முல்லை, மருதம்,
இவையாவும் நிலத்தில் இயற்கை 
அன்னை தீட்டிய ஓவியம். 

கடலும், கடல்வாழ் உயிர்களும் 
கடல் சார்ந்த தீவுகளும் 
தண்ணீர் இந்த பூமியில் 
தீட்டிய நீர் ஓவியம். 

வார்த்தை ஜாலங்கள் தன் 
பங்கினை அரங்கேற்றாத 
இடத்தில் உணர்சிகளை 
பிரதிபலிப்பது ஓவியம். 

உணர்வுகளை வெளிபடுத்த 
முடியாத இடத்தை 
ஆயிரம் அர்த்தங்கள் கொண்டு 
வெளிபடுத்துவது ஓவியம். 

கற்கால மனிதன் உணர்வுகளை, 
வாழ்வியல் முறையை  கண்டறிய 
இன்று வரை நமக்கு சான்றாக 
இருப்பது ஓவியம் 

அரசியல், சமயம், சமூகம் 
சார்ந்த கருத்துகளை நகைச்சுவை 
ததும்ப கூறுவது இன்றைய 
கேலி சித்திர ஓவியம். 

மொழிக்கு முன்னர் கருத்து 
பரிமாற்றத்தின் தொடர்பு ஊடகமும், 
மொழிக்கு எல்லாம் முப்பாட்டனும் 
நமது ஓவியம். 

காதலருக்கு காதலியின் முகம் ஓவியம் 
குழந்தைக்கு தாயின் முகம் ஓவியம் 
பசித்தவனுக்கு உணவிட்டவன் முகம் ஓவியம் 
நோயாளிக்கு மருத்துவன் முகம் ஓவியம் 
அக்காலம் இக்காலம் எக்காலம் ஆயினும் 
என்றும் நாம்மோடு வாழ்வில் பின்னிப் 
பிணைந்த ஒரு அங்கம் ஓவியம்!!! 

ந‌ன்றி!!!!! 

கைபேசி


விளக்கினுள் பூதம் வெளிப்பட்டதை போல
ஒரு கருவியில் உலகையே அடக்கி தந்த
நவீன அற்புத விளக்கு (கருவி) இந்த கைபேசி !
கைக்கு அடக்கமாக பேச உண்டாக்கிய கருவி – இன்று
உலகில் காலங்காலமாக இருந்த பல விடயங்களுக்கு
மாற்றாக அமைந்த கைபேசி !

குடும்பம் பிரிந்து திரைகடல் ஓடி
வேலை செய்யும் கணவன் பிரிந்த குடும்பத்தின்
கடிதம் காண நாட்கள் பல காத்திருந்தது அன்று !
ஒரு செயலி மூலம் அனைவரின்
முகம் பார்த்து பேசி மகிழும்
நெருக்கம் தந்தது கைபேசி இன்று !!

நண்பர்கள் கூடுகைக்கு ஒவ்வொரு இடத்தினின்றும்
வரும் நண்பர்களில் யாரேனும் ஏதோ ஒரு காரணத்தால்
பயணத்தடை ஏற்பட்டு அது தெரிய
சில நாட்கள் காத்திருந்தது அன்று !
ஒரு விசையின் மூலமாக அவர் இருப்பிடம் உடனே
அறிய செய்தது கைபேசி இன்று !!

வீட்டுப்பாடம் செய்து முடிக்க நூலகம் சென்று
இரண்டு புத்தகங்கள் எடுத்து பின்னர்
அதன் குறிப்பு எடுத்தது அன்று !
இணையத்தில் நொடியில் தேடி பல புத்தகத்தின்
சாரம் கண்டு தெளிவு பெற உதவிய
கையடக்க நூலகம் தந்தது கைபேசி இன்று !!

அலுவலக நிமித்தம் ஊரூராக சென்று 
சந்திப்புகள் நடத்தி பணிகள் மேற்கொண்டு
பணம் கால விரயம் கண்டது அன்று !
செயலி மூலம் கண்டு பேசி மின்னஞ்சல் மூலம்
பணியை பயணமின்றி முடிக்கும்
வசதியை தந்தது கைபேசி இன்று !!

நாடு கடந்து தொழில் செய்து
மாதக்கணக்கில் நேரம் பிடித்தது அன்று !
நொடிப்பொழுதில் அவற்றை நிகழ்த்திக்காட்டி
தொழில் துறையில் புதுப் போக்கையும்
புதிய தகவல் புரட்சியையும்
உண்டாக்கியது கைபேசி இன்று !!

கடிதம் மூலம் காதலித்து
பொது தொலைபேசியில் வரிசையில் நின்று
சில நிமிடம் பேசிய காதலர்கள் அன்று !
மணிகணக்கில் நேரம் காலம் கட்டுப்பாடு இன்றி
நினைத்த மாத்திரம் பேசும் காதலர்கள்
நெருக்கம் கொடுத்தது கைபேசி இன்று !!

எண்ணற்ற நன்மைகள் கூறிய போதும்
கைபேசியால் நாம் இழந்த சின்ன சின்ன
மகிழ்ச்சியும் இந்த கருவியால் உண்டு

தொலைவு ஏற்படுத்தும் நெருக்கத்தை முற்றிலும் நெறித்ததும்
புத்தகம் கொடுக்கும் ஸ்பரிசத்தை சம்ஹாரம் செய்ததும்
பண்டிகை கால வாழ்த்து மடல் மற்றும்
வாழ்த்து அட்டை தரும் மகிவை ஒழித்ததும்
இரவில் உறக்கம் தவிர்த்து ஆந்தைக்கு துணையாக செய்ததும்
வீட்டு நிகழ்வுக்கு கூட வாராமல் உறவின் நெருக்கம் குறைத்ததும்
குடும்பமே ஒன்றாக பேசி மகிழும் அன்யோன்னியம் கெடுத்ததும்
பல சொந்தங்களை காண்பதை நம்மை மறக்க செய்ததும்
இவ்வாறு நாம் இழந்தவைகள் ஏராளம் !!!

இருந்த இடத்தில வேலையை முடிக்கும்
வசதியை அரவணைத்த நாம் - ஆனால்
நேரில் சென்று சொந்தங்களைக் காணும்
சந்தோஷத்தையும் இருந்த இடத்தில் இருந்தே
அடைய நினைப்பது மூடத்தனம் !!!

காதலர்கள் கரம்பற்றி காதலுடன்
ஒரு நிமிடம் பேசி அடையும் இன்பம்
குறுஞ்செய்தியில் ஒரு நாள் பேசியும்
இல்லாமல் போவதே நமக்கு
சிறுக தந்து பெறுக மகிழ்விக்கும்
வாழ்வின் முக்கிய தத்துவம் !!!

நேரில் சென்று பெற்றோரிடம் நாம்
செலவிடும் அந்த ஒரு நிமிடம்
அவர்களுக்கு தரும் திருப்தியை - இந்த
தொழில்நுட்பம் பல மணிநேரத்தில் தருவதில்லை
என்பதே வாழ்வில் நாம் தவறாமல்
அறிய வேண்டிய நிதர்சனமான உண்மை !!!

உறவுகள் என்பதே உயிர்ப்பித்து இருப்பது
நாமும் - நம்மால் மற்றவரும் !
அந்த உயிர்ப்பித்து இருக்கும் மகிழ்வை இன்றல்ல
எந்த நாளிலும் கைபேசியோ வேறு எந்த
தொழில்நுட்பமோ தர இயலாது !!!

நாம் தொழில்நுட்ப வித்தகர் ஆனபோதிலும்
மனித உறவுகளோடு உயிர்ப்பித்து இருக்கும்
பண்பையும் பயில்வோமேயானால்
நாளைய காலம் நற்காலம்
நமக்கு என்றும் அமையும் பொற்காலம் !!!

நன்றி!!!! 


ராணுவ வீரர்க‌ள்


நாட்டை காக்க 
பிறந்த ஊரை விட்டு
நண்பர்கள் உறவுகள் விட்டு
குடும்பம் விட்டு
வளர்ந்த வீடு விட்டு 
மனைவி பிள்ளைகள் விட்டு 
எல்லை சென்று 
எமது எல்லையை காக்கும்
எல்லை சாமி நீ !!! 

இரவு பகல் பாராமல்
பனி மழை பாராமல் 
உணவு தூக்கம் பாராமல் 
காடு மலை பாராமல் 
பாலைவனம் ஆனாலும் 
சீரும் கடல் நடுவே ஆனாலும் 
காடு பனிமலை ஆனாலும் 
எதையும் பாராமல் 
மக்களை காக்கும் 
காவல் தெய்வம் நீ !!! 

பனிமலையில் பல நாட்கள் 
பனிப்புயல் பனிமழையில் 
இரத்தம் உறையும் குளிரில் 
கடுமையான வானிலையில் 
எந்த நேரமும் எல்லையில் 
எதிரி வான் வழி தாங்குவானோ
தரை வழி தாங்குவானோ 
என எந்நேரமும் விழித்து காக்கும் 
காவல் காரன் நீ !!! 

புதிதாய் மணமுடித்த தன் 
மனைவியை அவள் சூடிய 
மலர் வாடும் முன்னே 
அழைப்பு வந்ததும்  
கவலை தோய்ந்த மனதோடும் 
பனித்த கண்களோடும் 
ஏங்கும் அவளை 
ஒருமுறை அணைத்து 
நாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்க
எத்தனிக்கும் தேசத்தியாகி நீ !!! 

பெற்ற பிள்ளைகளை வருடத்தில் 
ஒரு முறை விடுப்பு 
எடுத்து வந்து 
கொஞ்சி விளையாடி 
பின்னர் மீண்டும் எல்லை சென்று 
புகைப்படத்திலும் நினைவிலும் 
வைத்து மீதி நாட்களை கடந்து 
எமக்காக உம் உறவு விட்டு 
இரவெல்லாம் எம்மை காக்கும் 
நாட்டின் நடமாடும் தெய்வம் நீ !!! 

சக ராணுவ நண்பர்களின் 
இறப்பை போரில் அருகில் 
கண்ட போதும் அவனுக்கு 
கண்ணீர் விடவும் நேரமின்றி 
எதிரியை அழித்து 
தாய்நாட்டை காக்கும் 
ஒற்றை இலக்கை 
கொண்டு வீறு கொண்டு 
எழும் எரிமலை நீ !!! 

எல்லையில் போர் ஆனாலும் 
ஊரில் வெள்ளம் என்றாலும் 
கலவரம் என்றாலும் 
பூகம்பம் என்றாலும் 
பேரிடர் மீட்பு என்றாலும் 
தலைவர்கள் பாதுகாப்பு என்றாலும் 
ரகசிய நடவடிக்கை என்றாலும் 
நுண்ணுயிர் தாக்குதல் என்றாலும் 
எந்த ஒரு அவசர காலத்திலும் 
அசராது காத்து நிற்கும் 
அஞ்சா நெஞ்சன் நீ !!! 

கொரோனா காலத்திலும் 
கிருமி பாதித்த தேசங்களில் 
இருந்து நம் மக்களை மீட்டும் 
மருத்துவ முகாம்கள் அமைத்தும் 
தன்னையும் காத்து கொண்டு 
பாதித்தோரை தனிமை படுத்தியும் 
விமானம் மூலம் மருந்துகள் சேர்த்தும் 
என மக்களை இந்த நேரத்திலும் 
காத்து நிற்கும் தீரன் நீ !!! 

குடும்பத்தினர் நலம் குறித்த 
கவலையை விட்டு 
எல்லையில் நாட்டை 
காக்கும் பணியில் 
இந்த கொரோனா காலத்திலும் 
தன் இன்னுயிரையும் 
துறந்த தொடர்ந்து 
செயல்படும் நம் எல்லையின் 
காவல் வீரர்கள் அனைவருக்கும் 
சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள் !!! 

நன்றி !!!


முரண்பாடு


சிக்கனம் - கஞ்சத்தனமாக பார்க்கப்படுகிறது

வன்மம் - தெரியாமல் ஆட்கொள்ளப்படுகிறது

பெருந்தன்மை - வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது

பேராசை - லட்சியமாக பார்க்கப்படுகிறது

அன்பு - சுலபத்தில் கிடைப்பதாக கருதப்படுகிறது

அழகு - வெளித்தோற்றத்தில் மட்டும் பார்க்கப்படுகிறது

காதல் - காமத்தின் கதவாக பார்க்கப்படுகிறது

காமம் - மலிவானதாக பார்க்கப்படுகிறது

கருணை - விளம்பரமாக பார்க்கப்படுகிறது

கண்ணியம் - தேவையற்றதாக பார்க்கப்படுகிறது

பண்பு - மரியாதையற்று பார்க்கப்படுகிறது

ஒற்றுமை - பேச்சோடு நிறுத்திக்கொள்ளப்படுகிறது

நட்பு - மற்றவரை பயன்படுத்துவதற்கு சொல்லப்படுகிறது

பாசம் - பாதத்தில் மிதிக்கப்படுகிறது

நாணயம் - நேர்மையற்று சென்று கொண்டிருக்கிறது

பகைமை - எங்கும் காணப்படுகிறது

சோம்பல் - பெரும்பாலானவரிடம் காணப்படுகிறது

அவசரம் - சுறுசுறுப்பாக பார்க்கப்படுகிறது

ஆரோக்கியம் - சுலபத்தில் சமரசம் செய்யப்படுகிறது

விழிப்புணர்வு - பேச்சுடன் நின்றுவிடுகிறது

மரணம் – நெருங்காது என நினைக்கப்படுகிறது

நன்றி 


முடிவா? முதலா?


வீழ்வதும் நன்றே
மழையாய் வீழ்ந்து
பூமியை சிரிக்க செய்தால் !

நிலையாமையும் நன்றே
ஆறாக பாய்ந்து
ஓடும் இடமெல்லாம் செழிப்படைந்தால் !

அறுபடுதலும் நன்றே
நெற்கதிராக மக்கள்
யாவர்க்கும் உணவாய் இருந்தால் !

மண்ணில் புதைதலும் நன்றே
விருச்சமாக உயர்ந்து
பூமிக்கு நன்மை செய்தால் !

உதிர்ந்து விழுதலும் நன்றே
பழைய இலையாய் உதிர்ந்து
புதிதாய் மீண்டும் முளைத்தால் !

பின்னால் செல்வதும் நன்றே
கடல் அலையாய் மீண்டும்
முழுமூச்சுடன் கரையை அடைந்தால் !

வீசப்படுவதும் நன்றே
காற்றாய் வீசி உயிர்களுக்கு
எல்லாம் உயிர் அளித்தால் !

கரைவதும் நன்றே
சர்க்கரையாய் கரைந்து
பிறர் வாழ்வை இனிக்கச்செய்தால் !

ஆவியாவதும் நன்றே
கடல்நீராய் ஆவியாகி கார்முகிலாய்
மீண்டும் பூமியில் துளியானால் !

முடிவு என்று சொல்லப்படுவது யாவும் முடிவல்ல
அவையாவும் அழகின் மற்றொரு உறுவம்
வேறொரு வடிவின் ஆரம்பம் !!!!

நன்றி !!!


கவிதை


மொழி எழுத்து கருத்து கற்பனை
நயம் எதுகை-மோனை ஆகியவற்றோடு
உணர்வுகளையும் சேர்த்து பரிமாறும்
மொத்த கூட்டின் கலவையே
இந்த எழுத்து வழி கவிதை.

வாழ்க்கை என்பதே ஒரு கவிதை
அதில் ஓவ்வொரு நிகழ்வும் ஒரு அழகிய கவிதை

காதலர்களின் கண்களும் பார்வையும்
சிரிப்பும் காதல் சொட்டும் வார்த்தையும்
அணைப்பும் தவிப்பும் தொலைவும்
பிரிவும் தரும் காதல் அந்த
காதலர்க்கு ஒரு அழகிய கவிதை

ஊர் கூடி வாழ்த்து கூறி சுற்றம்
சொந்த பந்தங்கள் யாவரும் கூடி
தேவர்கள் ஆசியுடன் திருமண பந்தத்தில்
நுழையும் தம்பதியர் வாழப்போகும் அந்த
தாம்பத்யம் ஒரு அழகிய கவிதை

இணைந்த தம்பதியர் சில வருடங்கள்
கடந்தும் வாரிசு இல்லாமல் ஊரார் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் ஆளாகி அவற்றை கடந்து சென்று
பின்னர் அழகிய சுடராக உருவாகும் கரு அந்த
தம்பதியருக்கு ஒரு அழகிய கவிதை

கருவுற்ற தாய் மசக்கை அடைந்து
உணவு தூக்கம் மறந்து வீட்டையும் ஆண்டு
குடும்ப சுமையையும் தாங்கி அக்கருவின்
அசைவில் மகிழ்ந்து அவள் பெற்றெடுக்கும் அந்த
குழந்தை ஒரு அழகிய கவிதை

பிறந்த குழந்தையின் பசி தூக்கம் வலி
அறிந்து பாலூட்டி சீராட்டி பாராட்டி
அதன் சிரிப்பில் உலகை மறந்து
அக்குழந்தையை நேசிக்கும் முதல் பெண்ணான அந்த
தாய் ஒரு அழகிய கவிதை.

குடும்பத்திற்கு உழைத்து இன்னல்கள் கண்டபோதும்
அக்குழந்தையின் சிரிப்பில் அனைத்தும் மறந்து
அணைத்து கொஞ்சி மகிழ்ந்து கைபற்றி நடை பழகி
இரவில் தோளில் சாய்த்து தூக்கம் துறக்கும் அந்த
தந்தை ஒரு அழகிய கவிதை

உருண்டு தவழ்ந்து தத்தி தத்தி நடந்து
குறும்புகள் பல செய்து வீட்டில் சுட்டியாய்
மழலை மொழி பேசி குறும்பு மிரட்டல் காட்டி
ஆண்மகனும் தாய்மையை உணரும் அந்த
உணர்வு ஒரு அழகிய கவிதை

சூழ்நிலையால் வெளிநாடு செல்லும் குடும்பத்தலைவன்
வருடங்கள் சில கடந்து விடுப்பு கிடைத்து
சொந்த ஊர் வந்து மனைவி பிள்ளைகள்
காணும் பொது அனைவரும் அடையும் அந்த
பேரானந்தம் ஒரு அழகிய கவிதை

குறும்பாய் விளையாடிய மகள் காலஓட்டத்தில்
வளர்ந்து பருவம் அடைந்து பழக்கத்திலும்
சில மாற்றங்கள் அடைந்து ஒரு மங்கையாக
தான் பெற்ற மகளிடம் தாயை காணும் அந்த
தந்தை-மகள் உறவு ஒரு அழகிய கவிதை

இத்தனை நாட்கள் இந்த வீட்டில் செல்ல ராணியாக
குறும்புக்காரியாக தங்கை என்ற அழகிய ராட்சசியாக
குடும்ப விளக்காக இருந்தவள் மணமுடித்து புகுந்தவீடு
செல்லும் நேரம் கண்ணின் ஓரம் ஊற்றெடுக்கும் அந்த
கண்ணீர்த்துளி ஒரு அழகிய கவிதை

கடமைகள் யாவும் முடித்து ஓய்வு பெற்று
நரை கண்டு பெரும்பருவம் அடைந்து
இத்தனை வருடங்கள் தன்னோடு பயணித்த இணையிடம்
தோழமை கலந்த காதலுடன் வாழும் அந்த
முதிர்பருவம் ஒரு அழகிய கவிதை.

வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும் பலப்பல கவிதைகள்
அவை ஓவ்வொன்றும் ஓவ்வொரு கவிதைகள்
சில இந்த மண்ணின் கவிதைகள்
சில இந்த மானுடத்திற்கான கவிதைகள்
மானுடம் தழைக்கும் வாழ்க்கை வாழும் ஓவ்வொரு மனிதரின்
வாழ்வுமே ஒரு அழகிய கவிதை !!!!!

நன்றி !!!!! 

கொரோனா


மனிதன் குற்றஉணர்ச்சி இல்லாமால்
உலகை சுரண்டியது 
கொரோனாவுக்கு முன்பு
ஓரணு நுண்உயிரி மனிதனை
ஆட்டி படைப்பது
கொரோனாவுக்கு பின்பு

துளியும் பயமின்றி மனிதன்
அனைத்தையும் திருடி அழித்தது 
கொரோனாவுக்கு முன்பு
நித்தமும் மனிதனை பயத்தில் ஒரு
ஓருயிரி கட்டி வைத்தது
கொரோனாவுக்கு பின்பு

மிருகத்தில் இருந்து நோய் பரவினால்
அதனை கொன்று குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதன் தொட்டு பரவுவதால்
வீட்டில் கட்டுப்பட்டு இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

எந்த நேரம் ஆனாலும் மனிதன்
கட்டுப்பாடின்றி சுற்றியது
கொரோனாவுக்கு முன்பு
ஊரடங்கு சட்டம் வந்ததால் வீட்டில்
கதவடைத்து இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

கழிவுகளை எல்லாம் நீரில் கலந்து
ஆறு-குளங்கள் கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
தனிமைபட்டு வீட்டில் இருந்ததால் அவை
இயற்கையாகவே சீரமைந்தது
கொரோனாவுக்கு பின்பு

மீன்கள் எல்லாம் மாண்டு பறவைகள்
உணவின்றி தவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதநடமாட்டம் குறைந்ததால் வெளிநாட்டிலிருந்தும்
பறவைகள் வந்தது
கொரோனாவுக்கு பின்பு

குடும்பத்தினர் வார இறுதியில் மட்டும்
ஒருவரையருவர் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
வாரத்தில் அனைத்து நாட்களும்
குடும்பமாய் கூடி இருப்பது
கொரோனாவுக்கு பின்பு

வெளியில் உணவு உண்பது பெருமை
என மார்தட்டியது
கொரோனாவுக்கு முன்பு
உணவகங்கள் இன்றி வீட்டில்
சமைத்து உண்ணுவது
கொரோனாவுக்கு பின்பு

கைபேசியில் தனித்தனியே
விளையாடி வென்றது
கொரோனாவுக்கு முன்பு
குடும்பம் கூடி மறந்த விளையாட்டை
ஒன்றாக விளையாடியது
கொரோனாவுக்கு பின்பு

பப்ஜி ஆடி புள்ளிகள் குவித்து
பெருமை கொண்டது
கொரோனாவுக்கு முன்பு
பல்லாங்குழி ஆடி புத்தியின்
கூர்மையை தீட்டியது
கொரோனாவுக்கு பின்பு

பிள்ளைகள் உறங்கியபின் அலுவல்
விட்டு வீடு திரும்பியது
கொரோனாவுக்கு முன்பு
பிள்ளைகள் ஊடே வீட்டிலேயே அலுவல்
வேலையும் செய்வது
கொரோனாவுக்கு பின்பு

தேவையற்ற பொருட்களை பகட்டாக
வாங்கி குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
தேவையான பொருளையும் திட்டமிட்டு
வரிசையில் நின்று வாங்குவது
கொரோனாவுக்கு பின்பு

நெடுந்தொடரில் மூழ்கி மதி
மயங்கி இருந்தது
கொரோனாவுக்கு முன்பு
நெடுந்தொடர் ஏது மின்றி நல்லிசை
கேட்டு மகிழ்வது
கொரோனாவுக்கு பின்பு

மதுகடைகளும் மது கூடங்களும்
நித்தமும் ஊரை கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
வரலாற்றி‌ல் காணாத வகையில் அவைகளும் மூடுவிழா கண்டது 
கொரோனாவுக்கு பின்பு

இருப்பதை விட்டு பறப்பதை கண்டு
தலைதெறிக்க ஓடியது
கொரோனாவுக்கு முன்பு
இருப்பதில் மகிழ்வாய் வாழமுடியும்
என்ற உண்மை உணர்ந்தது
கொரோனாவுக்கு பின்பு

வண்டியில் வந்து தெருநாய்கள்
பிடித்ததை மனிதன் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
சமூகவிலகல் பின்பற்றாமல் வண்டியில்
மனிதனை அழைத்து செல்வது
கொரோனாவுக்கு பின்பு

நாடு விட்டு நாடு சுற்றுலா
சென்று வந்தது
கொரோனாவுக்கு முன்பு
ஊர் விட்டு ஊர் செல்லவும்
தடைகள் போட்டது
கொரோனாவுக்கு பின்பு

கைகள் கொடுத்து குலுக்கி
கட்டித்தழுவி வரவேற்றது
கொரோனாவுக்கு முன்பு
கைகள் இரண்டும் கூப்பி
மனதார வரவேற்பது
கொரோனாவுக்கு பின்பு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என சொல்லி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
உடலால் தனித்து மனதால் இணைவோம்
என்று கூறி வாழ்வது
கொரோனாவுக்கு பின்பு

அன்றாட பல வேலைகள் செய்து
ஊதியம் ஈட்டி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
அனைத்தும் அடைத்து தின கூலி
இன்றி பரிதவிப்பது
கொரோனாவுக்கு பின்பு

பருவகாலத்தை கணக்கிட்டு
பயிரிட்டு அறுவடை செய்தது
கொரோனாவுக்கு முன்பு
பயிரிட்ட பயிரை சந்தைப்‌படுத்த
முடியாமல் விவசாயிகள் தவிப்பது
கொரோனாவுக்கு பின்பு

பொருளாதார கணக்குகள் கணக்கிட்டு
முதலீடுகள் பல செய்தது
கொரோனா வுக்கு முன்பு
பொருளாதார போக்கு தெரியாமல்
இருப்பதை காத்துக்கொள்ள நினைப்பது
கொரோனாவுக்கு பின்பு

பல போர்கள் பல சோதனைகள்
கண்டு அதை வெற்றி கண்டது
கொரோனாவுக்கு முன்பு
உலகையழித்த நுண்உயிரியை அடியோடு
வென்றோம் என வரலாறு கூறும்
கொரோனாவுக்கு பின்பு

விடியாத இரவு என்று எதுவும் இல்லை
இறவாத உயிர் என்று எதுவும் இல்லை
கொரோனாவும் இதற்கு விதி விலக்கு இல்லை
இந்த நிலையும் கடந்து போகும்
நல்ல பொழுது நம்மை வந்து சேரும்
மனதால் இணைவோம்!!!!

நன்றி


Wednesday, May 20, 2020

உன்னோடு என்றும் வாழ



கதிரவனும் ஒளி தந்து ஓய்ந்து 
துயில் கொள்ள சென்றுவிட்டான். 
விண்ணோடு கொஞ்சி விளையாட 
மதியும் வந்து விட்டாள். 
இறை தேட சென்ற பறவைகள் தத்தம்
கூட்டில் பெட்டையுடன் கூடி விட்டன... 
ஆனால் நானோ தனிமையில் 
உன் நினைவில் மூழ்கி தத்தளிக்கிறேன். 
அருகில் எவரும் இன்றி உன் 
நினைவுகள் மட்டும் துணையாய் 
ஏங்கி தவிக்கிறேன்... 

உன் பெயரை எழுதி எழுதியே 
ஓய்ந்து போனதடி என் கைகள். 
உன்னை எண்ணி எண்ணியே 
ஏக்கம் கொள்ளுதடி என் நெஞ்சம். 
உன்னோடு இருந்த நொடிகளை 
எண்ணி எண்ணி அது மனதை அழுத்த 
அந்த நினைவுகளின் பாரம் 
தாங்காமல் என் நெஞ்சம் நித்தமும் 
விம்மி விம்மி வெடிக்க 
விழி ஓரம் நீர் துளியும் 
கன்னம் தொட்டு செல்கிறது... 

உன்னை 
தோளோடு தோள் சாய்த்து 
விழியோடு விழி சேர்த்து
உடல் நோக உன்னை கட்டி அணைத்து 
உன் மடி மீது தலை சாய்த்து 
என் வலிகள் நீங்க 
மனம் விட்டு அழ வேண்டும் . 
உனக்காக 
ஏங்கி தவிக்கிறேன் 
நித்தம் காத்திருக்கிறேன் 
உன்னோடு என்றும் வாழ...




Monday, May 18, 2020

உன்னைத் தேடி


பணம் தேடும் இவ்வுலகில் 
மனம் தேடி அலைகிறேன். 
பதில் கூற எவரும் இன்றி 
செதில் செதிலாய் உடைகிறேன். 
இருளில் தனிமையில் நானும் 
கண்ணீர் தானே சிந்துகிறேன்.

ஆறுதல் கூற யாரும் இன்றி 
நித்தம் நித்தம் வாடுகிறேன். 
சோகம் தீர்க்க யாரும் இன்றி 
கண்ணீர் துடைக்க விரல்கள் இன்றி 
மீண்டும் மீண்டும் இறக்கிறேன்!!!

இதம் தரும் விடிகாலையும், 
மனம் வருடும் தென்றலும்
எரிகுழம்பாய் தோன்றுதே 
நரக வேதனை வாட்டுதே. 
நிஜம் என அருகில் சென்றதும்
நிழலாக மாறுதே, கானல் நீராய் ஆனதே !!!

என் ஆணி வேரும் வீழ்ந்ததே 
என் கண்ணீர் அனலாய் எரிக்குதே 
நொடிகள் யுகமாய் தோன்றுதே 
மனம் உன் அன்பை தேடுதே!!! 

மனத்தில் உள்ள சோகமும் 
தவிக்கும் என் நெஞ்சையும் 
அணைத்தாலே போதுமே 
உயிர் மீண்டும் துளிர் விடுமே 

அதட்டும் உன் கோவமும் 
மிரட்டும் உன் வார்த்தையும் 
கேட்டாலே பொதுமே 
பல ஜென்மங்கள் உயிர் வாழுமே . 

இதை காதல் என்று சொல்வதா 
இல்லை ஏக்கம் என்று சொல்வதா
நித்தம் கொல்லும் இவ்வுலகில் 
உன்னோடு ஒரு நொடியேனும் 
வாழும் காலம் சொர்க்கமே . 
மீண்டும் என் ஜீவன் உயிர் வாழுமே!!!!! 



பருவமும் நினைவுகளும்

 

சொந்தமாக சம்பாத்தியம் 
இல்லாத போதும் 
மகிழ்ச்சிக்கு பணம் தேவை 
என எண்ணாத பருவம்...

கோப்பையில் அடைக்க படாத
எந்த நீரையும் குடித்து 
தாகம் தீர்த்து கொண்ட 
தூய்மையான பருவம்...

கோடை விடுமுறையில் 
சுற்றுலா தலம் செல்லாமல் 
வெயிலை வீணடிக்காமல் 
ஆட்டம்போட்ட அற்புத பருவம்...

ஒரு ரூபாய்க்கு நெகிழியில் அடைத்த 
வண்ண பெப்சி கோலாவை 
ஐவர் பங்கிட்டு மகிழ்ந்த 
கோலாகல பருவம்...

நமக்கு நாமே விதித்து கொண்ட 
மட்டை பந்து, கால் பந்து விதிகளில் 
உலகக் கோப்பையை வென்ற 
பெருமிதம் அடைந்த பருவம்...

ஒரு ரூபாய்க்கு 
ஐந்து பிஸ்கட் வாங்கி உண்டு 
மகிழ்ச்சியில் திளைத்த 
மகத்தான பருவம்...

மதம் சாதி பாராமல் 
எந்த பண்டிகைக்கும் 
நண்பன் வீட்டிற்கு சென்று, சொல்லாமல் 
சமத்துவம் சொன்ன பருவம்...

தாய் தகப்பன் 
ஊருக்கு செல்ல அழைக்கையில் 
நண்பர்களை பிரிய மனமின்றி 
அழுது கொண்டே சென்ற அழகான பருவம்...

நண்பன் முதுகில் ஏறி குதிக்கும் 
பச்சை குதிரை ஆடிய போதும் 
முதுகில் குத்தாமல் 
அவனுடன் உண்மையாய் 
தோளுடன் தோளாய் நின்ற பருவம்...

மரத்தில் பயமின்றி ஏறி 
மாங்காய் பறித்து தோட்டக்காரன் 
விரட்டிய போது கை கோர்த்து 
ஒன்றாய் தப்பி ஓடி 
சிரித்து கொண்ட ஒப்பற்ற பருவம்...

பருவங்கள் பல கடந்தும் 
இன்றும் நீங்காமல் மனதில் 
நிலைத்து நிற்பது அந்த 
மகத்தான நினைவுகள்..

காலப் பயணம் சாத்தியம் ஆயின் 
நான் விரும்புவது 
மீண்டும் அந்த பருவத்திற்கு 
பின் நோக்கி சென்று 
அந்த பால்ய பருவத்திலேயே உறைய வேண்டும்...


என் பொக்கிஷம்

இருளில் தத்தளித்த எனக்கு 
சிறு தீ பொறியை 
ஒளியாய் கண்டேன்.

அருகில் வந்ததும் அது 
தீ பொறி அல்ல 
வைர ஒளி என அறிந்தேன்.

இழக்க மனம் இன்றி அதை 
எனதாக ஆக்கிட நினைத்தேன்.
அதை வைத்து பொருள் 
சேர்த்திட அல்ல 
என் பொக்கிஷமாக 
உயிர் உள்ளவரை காத்து நிற்க.

என் வைரமே 
என்னிடம் வாராயோ, 
இன்பம் தாராயோ, 
என்னுடன் சேராயோ??? 

என் அழகு தேவதைக்கு பிறந்தநாள்



12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி- 
குறிஞ்சியை விட அரிதாய் இந்த உலகிற்கு வந்த பெருமை  கொண்டவள் நீ!!! 
வானத்தில் இரவில் தோன்றும் அழகிய நிலவு- 
நிலவே மண்ணில் பிறந்த அதிசய நிகழ்வு நீ!!! 
காலத்தின் சுழற்சியில் கடந்து செல்லும் பல நாட்கள் - 
நீ பிறந்த இன்னாளோ நாட்களே பெருமை கொள்ளும் சிறப்பு பெற்றவள் நீ!!! 
எந்த ஒரு படிப்பிலும் இருக்கும் சிறிதளவு குறை - பிரம்மனே தன் படைப்பை கண்டு பெருமை கொள்ளும் குறையற்ற உன்னத படைப்பு நீ!!! 

அழகிற்கு எல்லாம் அழகு சேர்ப்பவள் நீ!
அழகிற்கு புதிய இலக்கணம் காட்டியவள் நீ!
சொக்க வைக்கும் சிரிப்புக்கு சொந்தகாரி நீ!
பார்பவர்களை கவர்ந்திடும் குறும்புக்காரி நீ!
செல்லமாய் கோவம் காட்டும் கோவக்காரி நீ!
அன்பாய் தூய பாசத்தை காட்டும் பாசக்காரி நீ!
சிறிய அடிகளை வைத்து செல்லும் அழகிய மலர் நீ!
கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட தேவதை நீ!
கவலையை மறக்க செய்யும் கனிய மொழி பேசுபவள் நீ!
எவரையும் கவரும் அழகிய விழிகள் உடையவள் நீ!
உனக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை தந்த என் தமிழும் நீ!
உன்னை பற்றிய கவிதை எழுத என்னை கவிஞன் ஆக்கியவளும் நீ!
ஒரு தாயே எனக்கு மகளாக பிறந்தவள் நீ!
தந்தையான போதும் உன் மடியில் தலைசாய தாய் மடி கொடுத்தவள் நீ!

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் குல தேவதையே!!!
பிரம்மனே கண்டு பெருமை கொள்ளும் குறையற்ற உன்னத படைப்பு நீ!
நிலவே மண்ணில் பிறந்த அழகிய பிறப்பு நீ!
இந்த இனிய நன்னாளில்
உன் எண்ணங்கள் அனைத்தும் திண்ணமாக
உன் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாக
உன் செயல்கள் யாவும் செம்மையாக
உன் பாதைகள் யாவும் வெற்றியின் பாதையாக
உன்னை சுற்றிலும் நல்ல சுற்றத்தார் நிறைவாக
உன் வாழ்க்கை என்றும் ஏற்றம் நிறைந்ததாக
பரம்பொருளின் ஆசி என்றென்றும் உன்னுடனே இருக்க
உன் முகம் என்றும் புன்னகை மாறா மதிமுகமாய் திகழ
நீ எல்லா வளங்களும் நலன்களும் பெற்று தடைகள் தாண்டி சிகரம் தொட நீ என்றும் சிறப்பபுடன் வாழ்வாங்கு வாழ்வாய்!!! 

உளம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!


உன் பேரை கேட்டாலே

உன் ஒற்றை வார்த்தை கேட்டாலே கேட்பவர்கள் காதில் தேன் பாயும்
இதயத்தில் இனிமை பிறக்கும்,
செயலில் வலிமை பிறக்கும்,
வார்த்தையில் மகிழ்ச்சி திளைக்கும்,
உள்ளத்தில் குதூகலம் பூக்கும்,
உடம்பில் சுறுசுறுப்பு கூடும்
பாலைவனம் சோலைவனம் ஆகும்,
விரக்தியில் இருப்பவருக்கு நம்பிக்கை பிறக்கும்,
கட்டுத்தரியும் கவிதை பாடும்,
நம் முகமே அழகாய் தோன்றும்,
குணத்தில் மென்மை மிளிரும்,
உலகமே அழகாய் மாறும்!!! 

உன்னால் முடியும்

பழகுவதற்கு இனியவளே!!!
மென்மை பொருந்தியவளே!!!
உன் வார்த்தை கேட்கும் போது புது தெம்பு உண்டாகும்.
உன் முகம் காணும் போது மனதில் மகிழ்ச்சி ஊற்று எடுக்கும்.
உன்னுடன் பழகும் போது வாழ்வின் மகிழ்ச்சி உணரப்படம்.
உன் கனிவான சொற்கள் நம்பிக்கை ஏற்படுத்தும்.
உன் ஆறுதல் வார்த்தைகள் விரக்தியில் இருந்து எவரையும் மீட்டு எடுக்கும்.
உன்னோடு என்றும் ஒரு உயிராய் பயணம் செய்ய வேண்டி மனம் நாடும்.

குணவதியே!
பவித்ரமானவளே!
இன்று ஏன் உனக்கு இந்த கலக்கம்?
ஏன் உனக்கு வாழ்வின் மீது இந்த குழப்பம்?
ஏன் இந்த தனிமை போராட்டம்?
உன் கண்ணில் ஏன் இத்தனை நீரோட்டம்?

சக மனிதன் உணர்வுக்கும் மதிப்பு அளிப்பவளே!
அழகிய சுந்தரியே!!!!
உனக்குள் இருக்கும் படைகள் உனக்காக காத்து கொண்டு இருக்கிறது
உன் தைரியம் என்னும் அடங்கா குதிரையை செலுத்தி முன்னேறு!
உன் தன்னம்பிக்கை என்னும் யானை படையை கொண்டு வீறு கொண்டு எழு!
உனது திறமை என்னும் கப்பல் படையை சோதனைகள் என்ற கடலில் எதிர்த்து செலுத்தி வெற்றி வாகை சூடு!
வான் முட்டும் நேர்மறை சக்தியும், திறமையும்** கொண்டவள் நீ!
உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும் புகழை அடையும் தீரன் நீ!
எல்லோர் மனதிலும் குடி கொண்ட சொந்தத்காரி நீ!

உன்னை
இகழ்வார் இகழட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
வஞ்சத்தால் வீழ்த்த முயலட்டும்

எந்த எதிர்மறை ஆயுதத்தை ப்ரயோகித்தாலும் அதை லாவகமாக கையாளும் திறமை கொண்டளே !
கலங்காதே! விம்மி வேகாதே!
பல சோதனைகளை கண்டவளே
அதை எதிர்த்து போறாடி வெற்றி பெற்றளே !
உன்னை சுற்றி நல்ல மக்களும் நல்ல வாய்ப்புகளும் உள்ளது
அதை அடையாளம் காண்.
உனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கு
நீ வெற்றியின் அடையாளம்!
எழுவாய், வருவாய், மலர்வாய்,
கதிரவன் போல ஒளிர்வாய்!!!!!!


 **நேர்மறை சக்தியும், திறமையும் (positive energy, skills

Sunday, May 17, 2020

சாதி-மதம்




 

மனிதரில் பல வகை உண்டு

அவரவர்க்கு ஒரு குணம் உண்டு

ஓருவர் போல ஒருவர் இலர் - ஆயினும்

நாம் அனைவரும் மனதால் ஒருவர்.

 

நீ முகமது  ஆன போதும்

நான் மகேசன் ஆன போதும்

நாம் இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள்

இந்த பாரத தாயின் தனிப்பெரும் பிள்ளைகள்.

 

கிறிஸ்து பிறந்த நாள் ஆயினும்

மஹாவீரர் பிறந்த நாள் ஆயினும்

அவை கூறிய விடயம் ஒன்றே

அது மானுடம் தழைக்கட்டும் நன்றே.

 

உனது வேர் பாரசீகம்/ஐரோப்பா ஆன போதும்

எனது வேர் சிந்து சமவெளி ஆன பொதும்

நூற்றாண்டு பல கடந்தும் நானும் நீயும் ஒன்றானோம்  

நம் காலம் கடந்தும் நம் சந்ததி நன்றாவோம்.

 

கணேச ஊர்வலத்தில் இஸ்லாமியர் உணவு அளிப்பதும்

ரமலான் திருநாளில் ஹிந்துக்கள் இனிப்பு அளிப்பதும்

நாம் மதசார்பற்ற தேசம் என்பதற்கு எடுத்துக்காட்டு

இதை நீயும் இந்த உலகிற்கு உரக்க சொல்லிக்காட்டு

 

நம்மை பிளவு படுத்த கயவர் பலர்

சந்தர்ப்பம் தேடும் போதும்

களவு செல்ல விடமாட்டோம் எங்கள்

மனிதநேயத்தை ஒரு போதும்

 

சாதியின் பெயரால் சண்டைகள் பல

நம்மை ஆட்டுவிக்கும் போதும்

துயரம் துடைப்போம் தவிப்போர்க்கு

அவர் எந்த சாதி ஆன போதும்.

 

பதவிக்காக ஒருசிலரின் குள்ளநரி வஞ்சகம்

நம்மை வேர் அருந்தாலும்

விட மாட்டோம் வஞ்சகம் தழைக்க - நமக்கு

கையறுநிலை வரும் போதும்.

 

பெருவெள்ளம் வந்து எங்கள் வாழ்வை புரட்டி போட்டாலும்

புரட்ட முடியாது எங்கள் மதத்தை தாண்டிய நட்பை

ஆழிப்பேரலை பொங்கி வந்து எம்மை அழிக்க வந்தாலும

அழிக்க முடியாது என்றும் உள்ள எங்கள் மனிதநேய பண்பை

 

கயவர் கலகங்களை தோற்றுவித்து குளிர் காயலாம்

மதம் பிடித்தவர் மதவெறி கொண்டு மிதிக்கலாம்

வஞ்சகர் நமக்கு நயவஞ்சகம் செய்யலாம்

துரோகிகள் நம்ப வைத்து நயமாய் கவிழ்க்கலாம்

நம் வரலாறை மறக்க செய்து நம்மை இகழலாம்

நம் ஒற்றுமைக்கு களையாய் முளைத்து நம்மை அழிக்கலாம்

ஆனாலும் என்றும் அழியாது எங்கள் மண்ணின் மாண்பு

 

நாம் அனைவரும் ஒருமனதாக வேரறுக்க வேண்டியது இந்த சாதியினை

பிரிவை ஏற்பட்டும் பிரிவினைவாத சாதி

கலகம் ஏற்படுத்தும் கலகக்கார சாதி

மதவெறிக்கு மனிதத்தை கொலை செய்யும் மிருக சாதி

புனிதம் கெடுக்கும் பொய்யர் சாதி

திண்ணை விட்டு வலைத்தளத்தில் சாதி பேசும் கயவர் சாதி

மானுடம் அழிக்கும் எவரையும் நம் ஒற்றுமையால் அழிப்போம் !!!!!

 

மனிதம் செழிக்கும் மரபுவழி கல்வியை மீட்டெடுப்போம்

பொய் புரட்டு இல்லா நல்ல சமூகத்தை மீட்டெடுப்போம்

அடுத்தவரை அழிக்காத நல்ல பண்பை மீட்டெடுப்போம்

நம் ஒவொருவருக்கும் வேறுபட்டவராயினும் - வேற்றுமையில்

ஒற்றுமை காக்கும் நல்ல தேசத்தை மீட்டெடுப்போம்

சாதி மதம் தாண்டிய புதிய பாரதம் படைப்போம்

நமக்கென நல்ல ஒரு புதிய வரலாறை படைப்போம் !!!!!!

 

ஜெய் ஹிந்த் !!!!