Tuesday, May 26, 2020
காதலே நீ
அவள் அழகு
நான் மாறவா???
என் சிறுக்கி மவளே
உன் வளைவில் சறுக்க வைத்த
என் இதய துடிப்பை எகிற வைத்த
என் ஆண்மையை ஆட்கொள்ள வந்த
உன் பெண்மையின் மேன்மையில்
தனிமையின் தாக்கம் தாங்க மாட்டாமல்
அருகில் இருந்தும் தொலைவில் சென்ற
உன் பார்வையின் கிரக்கத்தில்
என்னவளே நீ ஒரு கவிதை
உன் சிறப்பு
ஊடலும் தவிப்பும்
தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னில் வந்தவள்
இனியவளே
நெருக்கம்
கல்லறை
அவன் விஞ்ஞானி
அணுவை பிரித்து துகளை உறித்து உயிரை உருவாக்கும் பிரம்மன் அவன்...
அணுவையே ஆட்டுவிக்கும் பூவுலகின் பரமன் அவன்....
நேர் கொண்ட பார்வை கொண்ட தீரன் அவன்...
நேர்மறையான அணுவின் மைய கருவில் மின்னும் நேர்மின்னி (proton) அவன்...
எதிர் வினையை நேர்மறை ஆற்றலாக செயல் படுத்தும் நொதுமி (neutron) அவன்...
எதிரிகளின் எதிர் வினையை எதிர்க்கும் எதிர்மின்னி (electron) அவன்...
நவீன காலத்து கலியுக சித்தன் அவன்...
சித்தத்தையும் சித்தியில் ஆழ்த்தும் சக்தி பெற்ற சிவமயம் ஆனவன் அவன்...
காலனை காலத்தால் வெல்ல பிறப்பு எடுத்த காலதேவன் அவன்...
மெய்யுடன் உயிரினை சேர முயற்சிக்கும் மெய்ஞானி அவன்....
அவன் யார் என்பதை ஒவ்வொரு வினாடியும் அறிய விரையும் விஞ்ஞானி அவன்...
அவள் தான் பெண்
Thursday, May 21, 2020
முதுமை
நீர்
ஓவியம்
கைபேசி
ராணுவ வீரர்கள்
முரண்பாடு
முடிவா? முதலா?
கவிதை
கொரோனா
மனிதன் குற்றஉணர்ச்சி இல்லாமால்
உலகை சுரண்டியது
கொரோனாவுக்கு முன்பு
ஓரணு நுண்உயிரி மனிதனை
ஆட்டி படைப்பது
கொரோனாவுக்கு பின்பு
துளியும் பயமின்றி மனிதன்
அனைத்தையும் திருடி அழித்தது
கொரோனாவுக்கு முன்பு
நித்தமும் மனிதனை பயத்தில் ஒரு
ஓருயிரி கட்டி வைத்தது
கொரோனாவுக்கு பின்பு
மிருகத்தில் இருந்து நோய் பரவினால்
அதனை கொன்று குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதன் தொட்டு பரவுவதால்
வீட்டில் கட்டுப்பட்டு இருப்பது
கொரோனாவுக்கு பின்பு
எந்த நேரம் ஆனாலும் மனிதன்
கட்டுப்பாடின்றி சுற்றியது
கொரோனாவுக்கு முன்பு
ஊரடங்கு சட்டம் வந்ததால் வீட்டில்
கதவடைத்து இருப்பது
கொரோனாவுக்கு பின்பு
கழிவுகளை எல்லாம் நீரில் கலந்து
ஆறு-குளங்கள் கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
தனிமைபட்டு வீட்டில் இருந்ததால் அவை
இயற்கையாகவே சீரமைந்தது
கொரோனாவுக்கு பின்பு
மீன்கள் எல்லாம் மாண்டு பறவைகள்
உணவின்றி தவித்தது
கொரோனாவுக்கு முன்பு
மனிதநடமாட்டம் குறைந்ததால் வெளிநாட்டிலிருந்தும்
பறவைகள் வந்தது
கொரோனாவுக்கு பின்பு
குடும்பத்தினர் வார இறுதியில் மட்டும்
ஒருவரையருவர் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
வாரத்தில் அனைத்து நாட்களும்
குடும்பமாய் கூடி இருப்பது
கொரோனாவுக்கு பின்பு
வெளியில் உணவு உண்பது பெருமை
என மார்தட்டியது
கொரோனாவுக்கு முன்பு
உணவகங்கள் இன்றி வீட்டில்
சமைத்து உண்ணுவது
கொரோனாவுக்கு பின்பு
கைபேசியில் தனித்தனியே
விளையாடி வென்றது
கொரோனாவுக்கு முன்பு
குடும்பம் கூடி மறந்த விளையாட்டை
ஒன்றாக விளையாடியது
கொரோனாவுக்கு பின்பு
பப்ஜி ஆடி புள்ளிகள் குவித்து
பெருமை கொண்டது
கொரோனாவுக்கு முன்பு
பல்லாங்குழி ஆடி புத்தியின்
கூர்மையை தீட்டியது
கொரோனாவுக்கு பின்பு
பிள்ளைகள் உறங்கியபின் அலுவல்
விட்டு வீடு திரும்பியது
கொரோனாவுக்கு முன்பு
பிள்ளைகள் ஊடே வீட்டிலேயே அலுவல்
வேலையும் செய்வது
கொரோனாவுக்கு பின்பு
தேவையற்ற பொருட்களை பகட்டாக
வாங்கி குவித்தது
கொரோனாவுக்கு முன்பு
தேவையான பொருளையும் திட்டமிட்டு
வரிசையில் நின்று வாங்குவது
கொரோனாவுக்கு பின்பு
நெடுந்தொடரில் மூழ்கி மதி
மயங்கி இருந்தது
கொரோனாவுக்கு முன்பு
நெடுந்தொடர் ஏது மின்றி நல்லிசை
கேட்டு மகிழ்வது
கொரோனாவுக்கு பின்பு
மதுகடைகளும் மது கூடங்களும்
நித்தமும் ஊரை கெடுத்தது
கொரோனாவுக்கு முன்பு
வரலாற்றில் காணாத வகையில் அவைகளும் மூடுவிழா கண்டது
கொரோனாவுக்கு பின்பு
இருப்பதை விட்டு பறப்பதை கண்டு
தலைதெறிக்க ஓடியது
கொரோனாவுக்கு முன்பு
இருப்பதில் மகிழ்வாய் வாழமுடியும்
என்ற உண்மை உணர்ந்தது
கொரோனாவுக்கு பின்பு
வண்டியில் வந்து தெருநாய்கள்
பிடித்ததை மனிதன் கண்டது
கொரோனாவுக்கு முன்பு
சமூகவிலகல் பின்பற்றாமல் வண்டியில்
மனிதனை அழைத்து செல்வது
கொரோனாவுக்கு பின்பு
நாடு விட்டு நாடு சுற்றுலா
சென்று வந்தது
கொரோனாவுக்கு முன்பு
ஊர் விட்டு ஊர் செல்லவும்
தடைகள் போட்டது
கொரோனாவுக்கு பின்பு
கைகள் கொடுத்து குலுக்கி
கட்டித்தழுவி வரவேற்றது
கொரோனாவுக்கு முன்பு
கைகள் இரண்டும் கூப்பி
மனதார வரவேற்பது
கொரோனாவுக்கு பின்பு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என சொல்லி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
உடலால் தனித்து மனதால் இணைவோம்
என்று கூறி வாழ்வது
கொரோனாவுக்கு பின்பு
அன்றாட பல வேலைகள் செய்து
ஊதியம் ஈட்டி வாழ்ந்தது
கொரோனாவுக்கு முன்பு
அனைத்தும் அடைத்து தின கூலி
இன்றி பரிதவிப்பது
கொரோனாவுக்கு பின்பு
பருவகாலத்தை கணக்கிட்டு
பயிரிட்டு அறுவடை செய்தது
கொரோனாவுக்கு முன்பு
பயிரிட்ட பயிரை சந்தைப்படுத்த
முடியாமல் விவசாயிகள் தவிப்பது
கொரோனாவுக்கு பின்பு
பொருளாதார கணக்குகள் கணக்கிட்டு
முதலீடுகள் பல செய்தது
கொரோனா வுக்கு முன்பு
பொருளாதார போக்கு தெரியாமல்
இருப்பதை காத்துக்கொள்ள நினைப்பது
கொரோனாவுக்கு பின்பு
பல போர்கள் பல சோதனைகள்
கண்டு அதை வெற்றி கண்டது
கொரோனாவுக்கு முன்பு
உலகையழித்த நுண்உயிரியை அடியோடு
வென்றோம் என வரலாறு கூறும்
கொரோனாவுக்கு பின்பு
விடியாத இரவு என்று எதுவும் இல்லை
இறவாத உயிர் என்று எதுவும் இல்லை
கொரோனாவும் இதற்கு விதி விலக்கு இல்லை
இந்த நிலையும் கடந்து போகும்
நல்ல பொழுது நம்மை வந்து சேரும்
மனதால் இணைவோம்!!!!
நன்றி
Wednesday, May 20, 2020
உன்னோடு என்றும் வாழ
Monday, May 18, 2020
உன்னைத் தேடி
பருவமும் நினைவுகளும்
என் பொக்கிஷம்
என் அழகு தேவதைக்கு பிறந்தநாள்
உன் பேரை கேட்டாலே
உன்னால் முடியும்
Sunday, May 17, 2020
சாதி-மதம்
மனிதரில் பல வகை உண்டு
அவரவர்க்கு ஒரு குணம் உண்டு
ஓருவர் போல ஒருவர் இலர் - ஆயினும்
நாம் அனைவரும் மனதால் ஒருவர்.
நீ முகமது ஆன போதும்
நான் மகேசன் ஆன போதும்
நாம் இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள்
இந்த பாரத தாயின் தனிப்பெரும் பிள்ளைகள்.
கிறிஸ்து பிறந்த நாள் ஆயினும்
மஹாவீரர் பிறந்த நாள் ஆயினும்
அவை கூறிய விடயம் ஒன்றே
அது மானுடம் தழைக்கட்டும் நன்றே.
உனது வேர்
பாரசீகம்/ஐரோப்பா ஆன போதும்
எனது வேர்
சிந்து சமவெளி ஆன பொதும்
நூற்றாண்டு
பல கடந்தும் நானும் நீயும் ஒன்றானோம்
நம் காலம்
கடந்தும் நம் சந்ததி நன்றாவோம்.
கணேச
ஊர்வலத்தில் இஸ்லாமியர் உணவு அளிப்பதும்
ரமலான்
திருநாளில் ஹிந்துக்கள் இனிப்பு அளிப்பதும்
நாம்
மதசார்பற்ற தேசம் என்பதற்கு எடுத்துக்காட்டு
இதை
நீயும் இந்த உலகிற்கு உரக்க சொல்லிக்காட்டு
நம்மை
பிளவு படுத்த கயவர் பலர்
சந்தர்ப்பம்
தேடும் போதும்
களவு
செல்ல விடமாட்டோம் எங்கள்
மனிதநேயத்தை
ஒரு போதும்
சாதியின்
பெயரால் சண்டைகள் பல
நம்மை ஆட்டுவிக்கும் போதும்
துயரம்
துடைப்போம் தவிப்போர்க்கு
அவர் எந்த
சாதி ஆன போதும்.
பதவிக்காக
ஒருசிலரின் குள்ளநரி வஞ்சகம்
நம்மை
வேர் அருந்தாலும்
விட
மாட்டோம் வஞ்சகம் தழைக்க - நமக்கு
கையறுநிலை
வரும் போதும்.
பெருவெள்ளம்
வந்து எங்கள் வாழ்வை புரட்டி போட்டாலும்
புரட்ட
முடியாது எங்கள் மதத்தை தாண்டிய நட்பை
ஆழிப்பேரலை
பொங்கி வந்து எம்மை அழிக்க வந்தாலும
அழிக்க
முடியாது என்றும் உள்ள எங்கள் மனிதநேய பண்பை
கயவர்
கலகங்களை தோற்றுவித்து குளிர் காயலாம்
மதம்
பிடித்தவர் மதவெறி கொண்டு மிதிக்கலாம்
வஞ்சகர்
நமக்கு நயவஞ்சகம் செய்யலாம்
துரோகிகள்
நம்ப வைத்து நயமாய் கவிழ்க்கலாம்
நம்
வரலாறை மறக்க செய்து நம்மை இகழலாம்
நம்
ஒற்றுமைக்கு களையாய் முளைத்து நம்மை அழிக்கலாம்
ஆனாலும்
என்றும் அழியாது எங்கள் மண்ணின் மாண்பு
நாம்
அனைவரும் ஒருமனதாக வேரறுக்க வேண்டியது இந்த சாதியினை
பிரிவை
ஏற்பட்டும் பிரிவினைவாத சாதி
கலகம்
ஏற்படுத்தும் கலகக்கார சாதி
மதவெறிக்கு
மனிதத்தை கொலை செய்யும் மிருக சாதி
புனிதம்
கெடுக்கும் பொய்யர் சாதி
திண்ணை
விட்டு வலைத்தளத்தில் சாதி பேசும் கயவர் சாதி
மானுடம்
அழிக்கும் எவரையும் நம் ஒற்றுமையால் அழிப்போம் !!!!!
மனிதம்
செழிக்கும் மரபுவழி கல்வியை மீட்டெடுப்போம்
பொய்
புரட்டு இல்லா நல்ல சமூகத்தை மீட்டெடுப்போம்
அடுத்தவரை
அழிக்காத நல்ல பண்பை மீட்டெடுப்போம்
நம்
ஒவொருவருக்கும் வேறுபட்டவராயினும் - வேற்றுமையில்
ஒற்றுமை
காக்கும் நல்ல தேசத்தை மீட்டெடுப்போம்
சாதி மதம்
தாண்டிய புதிய பாரதம் படைப்போம்
நமக்கென
நல்ல ஒரு புதிய வரலாறை படைப்போம் !!!!!!
ஜெய்
ஹிந்த் !!!!